புதுடெல்லி: செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரம் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்! அது உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

4 ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்றாக இருக்கும், மற்றவர்களுக்கு அசுப அல்லது சராசரியான பலன்களைத் தரும். 


நாளை அதாவது 26 பிப்ரவரி 2022 அன்று நடக்கும் செவ்வாய் கிரகத்தின் இடப்பெயர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


பூமிக் காரகன், தைரியம், வலிமை ஆகியவற்றின் காரணகர்த்தாவாக கருதப்படும் செவ்வாய் கிரகம் 26 பிப்ரவரி 2022 அன்று ராசியை மாற்றப் போகிறது. செவ்வாய், தனுசு ராசியிலிருந்து சனியின் மகர ராசியில் நுழைகிறது.


சனியின் ராசியில் செவ்வாய் நுழைவது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அனைத்து ராசிகளுக்கும் செவ்வாய் கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்தை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சனி - செவ்வாய் சேர்க்கை, இந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நன்மை தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்கள் பெரிய பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.


ரிஷபம்: செவ்வாயின் சஞ்சாரம் ரிஷப ராசி வியாபாரிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். அதே நேரத்தில், வேலையில் இருப்பவர்களுக்கு நேரம் சாதாரணமாக இருக்கும். உறவுகளில் பொறுமையாக இருப்பது அவசியம்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளும் கவனமாக இருக்க வேண்டும். நேர்மையும் பொறுமையும் கடைப்பிடித்தால் வெற்றி கிடைக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், அதற்கான பலன்கள் குறைவாகவே இருக்கும். ஏப்ரல் 7, 2022 வரை புதிய வேலையைத் தொடங்கவோ அல்லது யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடவோ வேண்டாம்.


மேலும் படிக்க | இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்: சனி உதயத்தால் தொட்டது துலங்கும் 


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான காலம். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பணம் சாதகமாக இருக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். நீங்கள் எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துவீர்கள்.


கன்னி: கன்னி ராசிக்காரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தொழிலில் வெற்றி பெற சிறிது காலம் எடுக்கும்.


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அருளால் புதிய சொத்து சேரும். இருப்பினும், தொழிலில் கவனமாக நடக்க வேண்டிய நேரம் இது.


விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் ராசி மாற்றம் அதிக முயற்சி எடுத்தாலும் அதற்கான பலனையும் தரும். நேரம் நன்றாக இருக்கிறது.


தனுசு: தனுசு ராசிக்காரர்கள் ஏப்ரல் 7ம் தேதி வரை முதலீடு மற்றும் பேசுவதில் கவனமாக இருக்கவும், இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | Personality by Zodiac Sign: தங்கள் தலைவிதியை மாற்றும் திறன் பெற்ற ‘5’ ராசிகள்..!!


மகரம்: மகர ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் நிம்மதியாக வேலை செய்யலாம். கோபம் அதிகரிக்கும். பொறுமைக்கு நல்ல பலன் உண்டு என்பதை சோதித்து பார்க்க உகந்த சமயம் இது. இருப்பினும், சொத்து வாங்க இதுவே நல்ல நேரம்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வேலையில் தடைகள் வரும். இதனால் கடின உழைப்பு அதிகமாகவும், பலன் குறைவாகவும் இருக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.


மீனம்: செவ்வாயின் சஞ்சாரம் மீன ராசியினருக்கு தொழிலில் வெற்றியையும், பதவி உயர்வையும் தரும். வருமானமும் அதிகரிக்கும். நேரம் நன்றாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR