செவிலியர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே கீழே மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயால் (CORONAVIRUS) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரின் கண்களும் கொரோனா தடுப்பூசிக்காக (CORONAVIRUS VACCINE) காத்திருக்கின்றன. ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் (Pfizer) நிறுவனத்தின் தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறு வருகிறது. இதை தொடர்ந்து, மாடர்னா (Moderna) நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டுவர FDA அனுமதி வழங்கியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், அமெரிக்க நகரமான டென்னசியில் பணிபுரியும் செவிலியர் ஒருவர் ஃபைசர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 17 நிமிடங்களில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறையாக ஒரு செவிலியருக்கு தடுப்பூசி போட்ட பிறகு காணப்பட்ட பக்க விளைவுகள் (Side Effects of Vaccine) மக்களிடையே இதன் பயத்தை அதிகரித்துள்ளன. 


ALSO READ | Coronavirus Vaccine போட்டுக்கொள்ளும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்


அமெரிக்காவில், செவிலியர்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர், 30 வயது நிரம்பிய தலைமை செவிலியர் டிஃபானி பாண்டிஸ் டோவர் (Tiffany Dover). இவர் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சிலநிமிடங்களில், மயங்கி தரையில் விழுந்தார். இந்த வீடியோ உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் வைரலாகியது. இதன் பின்னர், சம்பவ இடத்தில் இருந்த மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை பரிசோதித்தது, சிறிது நேரம் கழித்து அவர் குணமடைந்தார். இந்த நேரத்தில், வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளது.



உண்மையில் நடந்தது என்ன?


செவிலியர் டிஃபானிக்கு எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியை அவரால் தாங்க முடியாது. உடனேமயக்கம் போட்டு விழுந்துவிடுவார். சில நிமிடங்களில் அவருக்கு மயக்கம் தானாகவே சரியாகிவிடும். தொலைக்காட்சி பேட்டியின் போதும் இது தான் நடந்தது.  அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அவரைப் பார்க்க, அவர் சிரித்த முகத்துடன் தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாத போது மயக்கம் வருவது வழக்கம் என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் சொல்லியிருக்கிறார்.


ALSO READ | அமெரிக்காவில் Moderna தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தகவல்!


இது குறித்து மருத்துவர்கள் கூறியது என்ன?


இந்த விஷயத்தில், இந்த கொரோனா தடுப்பூசிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அதிக வலியை உணரும்போதெல்லாம் அவர்கள் மயக்கம் அடைகிறார்கள் என்ற நிபந்தனை அவர்களுக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதே நேரத்தில், செவிலியர் மேலாளர், திடீரென்று நான் மீண்டும் நிலைமையில் இருக்கிறேன் என்று உணர்ந்தேன், என் உடல்நிலை மோசமாகிவிட்டாலும், இப்போது நான் நன்றாக உணர்கிறேன், என் கை வலியும் இல்லாமல் போய்விட்டது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR