பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சிய படி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகையாக மாறிய அரசியல்வாதி நுஸ்ரத் ஜஹானின் வார இறுதியில் அவர் சமீபத்தில் சந்தித்த ஒரு சிறுவனால் 'சிறப்பு' செய்யப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான் பகிர்ந்த மூன்று புகைப்படங்கள் இணையவாசிகளின் மனதில் இடம் பிடித்துவிட்டது. புகைப்படத்தில் பெரிய சிரிப்புடன் ஒன்றரை வயதான சிறுவனை கட்டிபிடித்து முத்தமிடுகிற புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  அவரின் பதிவு 24,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளன.  


தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய சிறந்த நபர் என்று கூறி மூன்று  படங்களை நுஸ்ரத் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .அதில் நுஸ்ரத் ஜஹான் குழந்தை ஒன்றை  மடியில் வைத்துக் கொண்டுகொஞ்சிய வாறு உள்ளார். அவர் மடியில் இருக்கும் அந்த குழந்தை பலூன் விற்று கொண்டு இருந்ததாகவும் தான் விற்கும்  பலுன்களை விட அந்த குழந்தை வண்ணமயமாக  உள்ளதாகவும்நுஸ்ரத் ஜஹான் தெரிவித்திருந்தார், இந்த புகைப்படங்கள் வைரலாக நிலையில் இதை பார்த்து பலரும் நுஸ்ரத் ஜஹானை பாராட்டி வருகின்றனர்.



அந்த இன்ஸ்டாகிராம் இடுகையில்; “என் வார இறுதி நாளை சிறப்பாக்கி விட்டது… பலூன்களை விற்கும் ஒன்றரை வயது குழந்தை… பலூன்களை விற்றது மிகவும் அழகாகவும் வண்ணமயமாகவும் இருந்தது” என்று கூறி #loveforall, #loveistheonlylanguage என்ற ஹேஷ் டேக்கினை சேர்த்துள்ளார்.  இவரது இந்த பதிவிர்க்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவிப்பதுடன். கருத்துக்களையும் பதிவிட்டு வருகிந்த்ரானர்.