அடுத்த மாதம் 28-ஆம் நாள் முதல் சேலத்திலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு விமானம் இயக்கப்டவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் ட்ரூ ஜெட் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 25-ஆம் நாள் சென்னை - சேலம் விமான சேவையினை துவங்கியது. 


சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் இந்த விமானமானது காலை 10.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்து பின்னர் சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு சென்னை சென்றடையும்.


இந்நிலையில் தற்போது இவ்விரு நகரங்களுக்கு இடையே மேலும் ஒரு விமான வழி சேவை துவங்கப்படவுள்ளது. தற்போது காலை விமான வழி சேவை சேவையினை வழங்கி வரும் ட்ரூ ஜெட் விமான நிறுவனமே மாலை நேரத்திலும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. 


இதன்படி அடுத்த மாதம் 28-ஆம் தேதி முதல் ட்ரூ ஜெட் நிறுவனம், சென்னை - சேலம் இடையே மாலை நேர விமான சேவையை துவங்குகிறது.