சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research - ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) இணைந்து, ஆரோக்கியம் தொடர்பான பல புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. பொதுவாக, சர்க்கரையானது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதன் அளவை குறைக்க வேண்டும் என கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினமும்  உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு  பெரும் கேடு


பதப்படுத்தப்பட்ட உணவில் அதிக நிறைவுற்ற கொழுப்பு உள்ள நிலையில், அதனை வழக்கமாக தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ICMR வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக கலோரி மற்றும் குறைந்த நார்ச்சத்து உள்ளது. ஜெம்ஸ், பேக் செய்யப்பட்ட ஜூஸ்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஹெல்த் ட்ரிங்க் போன்ற உணவுப் பொருட்களை குறைவான அளவில் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.


பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில்  உள்ள சர்க்கரையின் அளவை நிர்ணயிக்க்  ICMR பரிந்துரை


பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் சர்க்கரை மற்றும் மொத்த சர்க்கரையின் வரம்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ICMR கூறியுள்ளது. திடப்பொருட்களுக்கு, சர்க்கரை அளவு, மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் 5 சதவீதம் இருக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த வரம்பு அனைத்து வகையான சர்க்கரைக்கும் 10 சதவீதமாக இருக்க வேண்டு என கூறியுள்ளது. பானங்களில் அனைத்து வகையான சர்க்கரையிலிருந்தும்  30 சதவீத ஆற்றல் என்ற அளவில் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!


பிராண்டட் ஜூஸ்கள், பேக்கேஜ் பழச்சாறுகள், குக்கீஸ், ஐஸ்கிரீம்கள் மற்றும் காலை உணவுக்கான ரெடி டு ஈட் தானிய உணவுகளில் எந்த அளவு சுகர் இருக்கலாம் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகள் பல உணவுப் பொருட்களின் தாயாரிப்பில் மாற்றங்களைக் ஏற்படுத்தும். பல குளிர்பானங்களை தயாரிக்கும் பார்முலாவிலேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.


ICMR  வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து கருத்த்ய் தெரிவித்துள்ள சில பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்கள், வழிகாட்டுதல்களை வெளியிடப்படுவதற்கு முன்பு தங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறி உள்ளன. எனினும், ஐசிஎம்ஆர் தாங்கள் வெளியிட்ட இந்த புதிய வழிகாட்டுதல்கள் தொடர்பாக உறுதியாக உள்ளதாககூறப்படுகிறது . பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களுக்கான கலோரி அளவு, சுகர் அளவு வரம்புகளைக் கட்டுப்படுத்தும் முந்தைய விதிமுறைகளை விட தற்போது கொண்டு வரப்பட உள்ள விதிகள் கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | தினமும் ஓடினால் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுக்குள் வருமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ