PAN Card Latest News: இன்றைய காலகட்டத்தில், இந்தியாவில் பான் கார்டு என்பது கட்டாய ஆவணமாக உள்ளது. பான் அட்டை இல்லாமல், எந்த நிதி பரிவர்த்தனையும் நடக்காது. அனைத்து வித நிதி பரிவர்த்தனைகளுக்கும் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கும் பான் அட்டை அவசியமாகும். வங்கி முதல் அலுவலகம் வரை, பான் அட்டை இல்லாமல் எந்த நிதி செயல்முறையையும் செய்ய முடியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டை (PAN Card) ஆதாருடனும் மற்ற இடங்களிலும் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதை செய்வதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர் 2021 ஆக இருந்தது. இது இப்போது 31 மார்ச் 2022 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


பான் கார்டு தொடர்பான தவறுகளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இரண்டு பான் அட்டைகளை வைத்திருப்பது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்


நீங்கள் எங்கு பான் எண்ணை உள்ளிட்டாலும், பான் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள பத்து இலக்க பான் எண்ணை மிகவும் கவனமாக நிரப்ப வேண்டும். ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தாலோ, அல்லது எண்களை இடம் மாற்றி போட்டாலோ, உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.


இதனுடன், இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தாலும், பெரிய அபராதம் (Penalty) செலுத்த வேண்டியிருக்கும். இதனால் உங்கள் வங்கிக் கணக்கும் முடக்கப்படலாம். ஆகையால், உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், உடனடியாக உங்கள் இரண்டாவது பான் கார்டை ஒப்படைக்க வேண்டும். வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 272B-யிலும் இதற்கான ஏற்பாடு உள்ளது.


ALSO READ | ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்: முழு விவரம் இதோ


உங்கள் இரண்டாவது பான் கார்டை எவ்வாறு ஒப்படைப்பது


- பான் எண்ணை ஒப்படைக்கும் செயல்முறை எளிதானது. இதற்கு ஒரு பொதுவான படிவம் உள்ளது, அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.


- இதற்கு, நீங்கள் வருமான வரி இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.


- பின்னர், ‘Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.


- படிவத்தை இப்போது பதிவிறக்கம் செய்யவும்.


- இப்போது படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஏதேனும் NSDL அலுவலகத்திற்குச் சென்று சமர்ப்பிக்கவும்.


- இரண்டாவது பான் கார்டைச் சமர்ப்பிக்கும் போது, ​​அதைப் படிவத்துடன் சமர்ப்பிக்கவும்.


- இதை ஆன்லைனிலும் செய்யலாம்.


ஒரே முகவரியில் ஒரே நபரின் பெயரில் வரும் இரண்டு வெவ்வேறு பான் கார்டுகள் இந்த வகையைச் சேர்ந்தவை. உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால், ஒன்றை சரண்டர் செய்ய வேண்டும் எப்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Aadhaar Card: மக்களுக்கு நல்ல செய்தி அளித்தது UIDAI, இனி பணிகள் இன்னும் சுலபமாகும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR