ராம்கோபால் வர்மாவின் அடுத்த திரைப்படம் ’த்ரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணியையும் அறிமுகம் செய்துள்ளனர்..!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரானோ ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். இருந்தாலும், இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படங்களை வெளியிடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அது, சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள். 


இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என 'கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்' (CLIMAX and NAKED) என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து 'த்ரில்லர்' என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார் ராம்கோபால் வர்மா. இது குறித்து அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், "எங்கள் அடுத்தப்படத்தின் கதாநாயகி இவர்தான். அப்சரா ராணி. இத்திரைப்படத்திற்கு த்ரில்லர் என பெயர் வைத்திருக்கிறோம். க்ளைமாக்ஸ், நேக்கட் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இத்திரைப்படம் உருவாகவுள்ளது" என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



READ | நமது வாழ்கை துணையுடன் படுக்கையை பகிர்வதால் மன அழுத்தம் குறையும்..!


இந்தப் படத்தில் ஒடிஷா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டார் வர்மா. நேற்று மாலை அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை அறிமுகம் செய்துள்ளார். அதற்குள் அவரை 20 ஆயிரம் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். தன் டுவிட்டரில் ஒரு ஆபாச கோணத்தில் எடுத்த புகைப்படத்தையும் நள்ளிரவில் வெளியிட்டார். அதைப் பார்த்த வர்மா இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்டார். 'எனது அம்மா தான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்' எனப் பதிலளித்துள்ளார் அப்சரா.