உலகம் முழுவதும் மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வங்கிகளில் டெபாசிட் செய்கின்றனர்.  ஆனாலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கி கணக்கில் பணம் வைத்து இருந்தால் வருமான வரித்துறையின் நோட்டீஸ் உங்கள் வீட்டிற்கு வரலாம்.  தற்போது ஒவ்வொருவருக்கும் வங்கியில் குறைந்தபட்சம் ஒரு சேமிப்பு கணக்காவது இருக்கும். வங்கி கணக்கை UPI யுடன் இணைத்தால் இணையம் மூலம் பணத்தை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.  சேமிப்புக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வங்கியில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கிடைக்கும், இது உங்கள் வருமானத்தையும் அதிகரிக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும்.  சேமிப்புக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. ஆனால் அதற்கும் ஒரு வரம்பு உள்ளது, அதற்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கான வருமான வரி விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ரூ.18,000ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கும் சம்பளம்


சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்?


உங்கள் சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ITR வரம்புக்குள் வரும் தொகையை மட்டுமே வைத்து இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
நீங்கள் அதிக பணம் வைத்திருந்தால் அதில் கிடைக்கும் வட்டிக்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். வருடம் இறுதியில் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, ​​உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது? அதற்கு எவ்வளவு வட்டி கிடைத்துள்ளது என்பதை வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். உங்களின் சேமிப்பு கணக்கு தொகையிலிருந்து நீங்கள் மாதம் மாதம் பெறும் வட்டி உங்கள் வருமானத்தில் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருந்தால், அதற்கு வங்கியில் இருந்து ரூ.10,000 வட்டி கிடைக்கும். வருமான வரி விதிகளின்படி உங்கள் மொத்த வருமானம் ரூ.10,10,000 என்று கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.


உங்கள் கணக்கில் அதிக பணம் வைத்திருந்தால் என்ன நடக்கும்?


மத்திய அரசின் விதிகளின்படி, சேமிப்புக் கணக்கில் பணத்தை வைப்பதற்கு குறிப்பிட்ட வரம்பு இல்லை. ஆனால், ஒரு நிதியாண்டில் உங்கள் கணக்கில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தால், இது குறித்து வருமான வரித்துறைக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது வருமான வரி வரம்புக்கு உட்பட்டது. நீங்கள் இதைச் செய்யாவிட்டால், வரி ஏய்ப்புக்காக வருமான வரித் துறை நோட்டீஸ் உங்கள் வீட்டிற்கு வரலாம்.  உங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.  பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் நிதி நடவடிக்கைகளின் மோசடிகளை தடுக்க, பணப் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்த இந்த வரம்புகள் கொண்டுவரப்பட்டன.  நிர்ணயிப்பதற்கான காரணம். ஆண்டு வரம்பை பொறுத்த வரையில், சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சத்தை நீங்கள் ரொக்கமாக டெபாசிட் செய்து கொள்ளலாம்.  அதே போல் வங்கியில் உள்ள பணத்தில் இருந்து பெறப்படும் வட்டி ரூ.10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அதுவும் வரிகளுக்குள் வரும்.


மேலும் படிக்க | HDFC வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. வட்டியில் மிகப்பெரிய மாற்றம், உடனே படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ