ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனிபகவான் ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறார். ஆனால், சனி பகவான் தனது அருளைப் பொழியத் தொடங்கிவிட்டால், அவர் அதை நிறுத்தவும் மாட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவானின் அருள் கிடைத்துவிட்டால், ஆண்டியும் அரசனாகலாம். ஆகையால், சனியின் சிறு மாற்றமும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது சொந்த ராசியான மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி இன்று அதாவது பிப்ரவரி 24ம் தேதி முதல் உதயமாகிறார். சனியின் உதயம் 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகின்றது. 


சனி பகவானின் உதயம் சில ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம், பதவி, புகழ் என அனைத்தும் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், செல்வம் பெருகும்


மேஷம்:


சனியின் உதயம் மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராஜயோகத்தை உருவாக்குகிறது. ராஜ யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். பல சாதனைகளை இவர்கள் இந்த காலத்தில் செய்வார்கள். குறிப்பாக அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். அவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 


ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனியின் உதயத்தால் ராஜயோகம் உருவாகும். தொழில், வியாபாரம் இரண்டிலும் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பண வரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.


மேலும் படிக்க | Admirable Zodiac: கவர்ச்சியான ராசிகள்! எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கும் ராசி உங்களுடையதா? 


கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் வெற்றியைத் தரும். பண வரவால் நன்மை உண்டாகும். கூட்டுப் பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திருமண வாழ்க்கை / காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.


துலாம்:
சனியின் உதயத்தால் துலா ராசிக்காரர்களுக்கு நிதிப் பலன்கள் உண்டாகும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். தொழில்-வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.


மகரம்: 


மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் ஏற்ற நேரமாக உள்ளது. சனியின் உதயம் இவர்களது திரிகோண ராஜயோகத்தை உண்டாக்குகிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மகர ராசிக்காரர்கள் பெரிய லாபத்தை ஈட்டுவார்கள். நீங்கள் செய்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். 


கும்பம்:


சனியின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயத்தைத் தரும். கும்ப ராசிக்காரர்கள் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் முழு ஆதரவைத் தரும். சென்ற இடங்களில் எல்லாம் மரியாதை கிடைக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இனிமையாக பேசி மற்றவர்களை வசீகரிப்பதில் வல்ல ‘3’ ராசிக்காரர்கள்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR