திருப்பதியில் வருகின்ற 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு தரிசம் ரத்து செய்யபடுவதாக கோவிலின் இணை செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜூ தெரிவித்துள்ளார்.


இதை தொடர்ந்து, பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கு ஏற்ப லட்டு பிரசாதம் தட்டுபாடு இல்லாமல் கிடைக்க இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி முதல் வி.ஐ.பி தரிசனத்திற்கு ஆதார் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.