இன்றைய சூழலில் பலருக்கும் காலை எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை பல்வேறு வேலைகள் உள்ளது. நாள் முழுவதும் வேலையை முடித்துவிட்டு இரவு தூங்கும் போது சோர்வாக உணரலாம், இது அனைவருக்கும் பொதுவாக உள்ள ஒன்றுதான். கடினமாக உழைக்கும் போது உடல் சோர்வடையும், ஆனால் ஒரு சிலருக்கு சிறிய வேலைகள் செய்தாலே மூச்சு வாங்குதல் தொடங்கி அதிகமாக வியர்வை வந்து உடல் பலவீனமாக உணர்வார்கள். இதற்கு உடலில் தேவையான சக்திகள் இல்லாதது முக்கிய காரணமாகும். இதனால் நமது பணிகளை முடிப்பது கெட்டுவிடும். இதுபோன்ற சூழலில் உடலுக்கு தேவையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த பாகங்களில் வலியா? இது கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறியாக இருக்கலாம்... ஜாக்கிரதை!!


சிறிய வேலை செய்த பிறகு சோர்வாக உணர்ந்தால் உடலில் சகிப்புத்தன்மையின்மை காரணமாக இருக்கலாம். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஸ்டாமினா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலுக்கு உடனே ஆற்றலை தருகிறது. மேலும் நாள் முழுவதும் முழு வேகத்துடன் வேலைகளை செய்ய அனுமதிக்கிறது. எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தால் அன்றாட வேலையை செய்வதற்கான திறனை அதிகரிக்க உடலில் சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும். இதனை அதிகரிக்க தினசரி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். இதற்கு அதிகமாக செலவு செய்யாமல் இயற்கையாகவே சகிப்புத்தன்மையை அதிகரிக்க சில உணவுகள் உள்ளன.


ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற பழங்களில் நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில்  இயற்கையாகவே சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகின்றன.


தினசரி இரவு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானத்தை அதிகப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள  வைட்டமின்கள், நார்ச்சத்து ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது.


பீட்ரூட் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆற்றலை அதிகப்படுத்துகிறது.


கீரையில் உடலுக்கு தேவையான பல சக்திகள் நிரைந்துள்ளது. இரும்புச்சத்து முதல் மக்னீசியம், வைட்டமின்கள் என இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும் பல சத்துக்கள் இவற்றில் உள்ளது. 


பாதாம் பருப்பை தினசரி காலையில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகின்றன.


சியா விதை களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரைந்துள்ளது. மேலும் புரதம், நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளதால் நாள் முழுக்க தேவையான ஆற்றலை வழங்குகிறது.


நீங்கள் அதிகம் சோர்வாக உணர்ந்தால் முட்டை, மீன், இறைச்சி போன்ற அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | சோர்வு, அதிக தாகம், அதிக பசி... சுகர் லெவல் எகிறும் அறிகுறிகள் இவை: ஜாக்கிரதை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ