சோர்வு, அதிக தாகம், அதிக பசி... சுகர் லெவல் எகிறும் அறிகுறிகள் இவை: ஜாக்கிரதை!!

Symptoms of High Blood Sugar Level:ஒருவருக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகமானால், அதனால் பக்கவாதம், இதய நோய், சிறுநீரக நோய், பார்வை கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் உலக அளவில் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது.   

Symptoms of High Blood Sugar Level: இன்றைய அவசர உலகில் நீரிழிவு நோய் பலரை ஆட்கொண்டு உள்ளது. இந்த நோயில், உடலால் போதுமான அளவு இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதை சரியான நேரத்தில் கவனிக்காமல் போனால் ஆபத்தாகலாம். உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், அதனால் உடலில் தெரியும் சில அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

நீரிழிவு நோயை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால், அது தீவிர நிலையை எடுக்கக்கூடும். இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், நம் உடல் சில அறிகுறிகளை அளிக்கும். அவற்றை பற்றிய புரிதல் கொண்டு 

2 /9

வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் இரத்த சர்க்கரை அளவை ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, ​​சிறுநீரகங்கள் அதை சிறுநீரின் மூலம் வெளியேற்றிக்கொண்டே இருக்கும், இதன் காரணமாக நீங்கள் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

3 /9

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுகின்றது.  குளுக்கோஸ் உடலில் சுறுசுறுப்பை பராமரிக்க உதவுகிறது. உடலில் அதன் குறைபாடு ஏற்பட்டால், அதன் காரணமாக சோர்வான உணர்வு ஏற்படுகின்றது. 

4 /9

தாகம் எடுப்பது சகஜம்தான். ஆனால் தண்ணீர் குடித்த பிறகும் அடிக்கடி தாகம் எடுப்பது பொதுவானதல்ல. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, ​​சிறுநீரகங்கள் தண்ணீரை வடிகட்டி, சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றும். இதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்படுகின்றது. இதனால் அதிகமாக தாகம் எடுக்கிறது. 

5 /9

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில் எடை இழப்பும் ஒன்றாகும். செல்கள் போதுமான ஆற்றலைப் பெறாதபோது, ​​​​செல்கள் தசைகளிலிருந்து ஆற்றலை எடுக்கத் தொடங்குகின்றன, இதன் காரணமாக எடை இழப்பு ஏற்படுகிறது.

6 /9

கண் பார்வையில் சிக்கல் இருந்தாலோ, அல்லது தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றாலோ, அதுவும் உயர் இரத்த சர்க்கரை அளவின் அறிகுறியாக இருக்கலாம். இதில், கண்களில் திரவம் சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக பார்வை பலவீனமாகி மங்கலாகிறது. 

7 /9

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது, ​​உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய முடிவதில்லை. இதனால், உடலில் குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுகிறது. இந்த வேளையில், உடல் பசியின் சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புகிறது. இதன் காரணமாக அடிக்கடி பசி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. 

8 /9

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால், நரம்புகள் சேதமடையத் தொடங்குகின்றன. அதன் காரணமாக கைகள் மற்றும் கால்களில் வலி மற்றும் உணர்வின்மை போன்ற பிரச்சினைகள் தொடங்குகின்றன. இந்த நிலை நீரிழிவு நியூரோபதி என்று அழைக்கப்படுகிறது. இது உயர் இரத்த சர்க்கரை அளவின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.