புதுடெல்லி: ஜோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை. இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு காது தொடர்பான உபாதைகள் உண்டாகும். முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.


ரிஷபம்


குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.


மிதுனம்


எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல்நலம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.


ALSO READ | புத்திர பாக்கியம் இல்லையா; குழந்தை செல்வத்தை அருளும் திருவாலங்காடு


கடகம்


குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் உண்டாகும். எண்ணெய் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.


சிம்மம்


புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலைகளும், தனவரவுகளும் உண்டாகும்.


கன்னி


வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.


துலாம்


உணவு பொருள் சார்ந்த வியாபாரிகளுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் லாபம் உண்டாகும். அறிவியல் சார்ந்த விஷயங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் உண்டாகும். சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் பண நெருக்கடிகள் ஏற்பட்டு அகலும்.


ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!


விருச்சகம்


எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்கள் முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.


தனுசு


எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.


மகரம்


குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பாராத உதவிகளின் மூலம் சமாளிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


கும்பம்


சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை மற்றும் வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உடல் அசதிகளின் மூலம் சோர்வு உண்டாகும். உயர்நிலை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே எண்ண ஒற்றுமைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.


மீனம்


உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உறவினர்களின் வழியில் ஆதாயமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவும், அறிமுகமும் ஏற்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR