புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...    


ராசிபலன் -04-10-2021


மேஷம்: உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபிட்சமான நாள்.


ரிஷபம்: புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சிலரது சந்திப்பின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பும், ஆதரவுகளும் உண்டாகும். பழமையான விஷயங்களின் மீது ஈடுபாடு ஏற்படும். அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். 


READ ALSO | அன்னதானத்தின் சிறப்புகளும் தான வீரன் கர்ணனின் கொடையும்


மிதுனம்: புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் ஆதரவான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


கடகம்: சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். சுயதொழிலில் லாபங்கள் மேம்படும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஒத்துழைப்புகள் கிடைக்கும் நாள்.


சிம்மம்: வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய மனை மற்றும் அதை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். குழப்பமான நாள்.


கன்னி: உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சுதந்திரமான நாள்.


READ ALSO | பஞ்சாங்கம்: 2021 அக்டோபர் 04, புரட்டாசி 18ம் நாள், திங்கட்கிழமை


துலாம்: குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள்  சாதகமாக அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் நட்பும் மாற்றத்தை ஏற்படுத்தும். புரிதல் அதிகரிக்கும் நாள்.


விருச்சிகம்: கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் மேம்படும். சந்திப்புகள் உண்டாகும் நாள்.


தனுசு: நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.


Read Also | ஆறு கால பூஜையின் தாத்பர்யங்கள் இவை தான்...


மகரம்: உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.


கும்பம்: எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவுகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புத்துணர்ச்சியான நாள். 


மீனம்: பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். இழுபறிகள் குறையும் நாள்.


Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR