பாஸ்போர்ட் அமைப்பு உலகில் தொடங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஒரு நாட்டின் ஜனாதிபதி முதல் அவர்களின் பிரதமர் வரை, ஒவ்வொருவரும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல இராஜதந்திர பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். இருப்பினும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல பாஸ்போர்ட் தேவைப்படாத மூன்று சிறப்பு நபர்கள் பிரிட்டன் மன்னர் மற்றும் ஜப்பான் மன்னர் மற்றும் ராணி. இந்த பாக்கியம் சார்லஸ் ராஜா ஆவதற்கு முன்பு ராணி எலிசபெத்திடம் இருந்தது. சார்லஸ் பிரிட்டன் மன்னராக பதவியேற்றவுடன், அவரது செயலாளர், வெளியுறவு அமைச்சகம் மூலம் அனைத்து நாடுகளுக்கும் ஒரு ஆவணச் செய்தியை அனுப்பினார், இப்போது சார்லஸ் பிரிட்டனின் ராஜா, மற்றும் தடையின்றி முழு மரியாதையுடன் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஏசி பெட்டியில் பயணிப்பவரா? ரயில்வேயின் இந்த ரூல்ஸ் தெரியுமா? பாத்து நடந்துக்கோங்க



தற்போது, ​​ஜப்பானின் பேரரசர் ஹிரோனோமியா நருஹிட்டோ, அவரது மனைவி மசாகோ ஓவாடா ஜப்பான் பேரரசி. ஜப்பான் பேரரசர் மற்றும் பேரரசி வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்று 1971 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகம் தனது பேரரசர் மற்றும் பேரரசிக்கு இந்த சிறப்பு ஏற்பாட்டைத் தொடங்கியதாக ஜப்பானின் இராஜதந்திர பதிவுகள் காட்டுகின்றன.  ஜப்பான் உலக நாடுகள் அனைத்திற்கும் தங்கள் பேரரசர் மற்றும் பேரரசி பாஸ்போர்ட் இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வர அனுமதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ கடிதத்தை அனுப்புகிறது. இவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவது இல்லை.


உலகின் அனைத்து பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது, ​​அவர்கள் பாஸ்போர்ட்களை வைத்திருக்க வேண்டும், அவர்களின் பாஸ்போர்ட்கள் தூதரக பாஸ்போர்ட்களாக இருக்கும், ஆனால் அவர்களுக்கு ஹோஸ்ட் நாடு முழு சலுகைகளையும் வழங்குகிறது. அவர்கள் குடிவரவுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு முன்பாக தங்களை உடல் ரீதியாக ஆஜராக வேண்டியதில்லை மற்றும் பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்தியாவில், இந்த அந்தஸ்து பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்குக் வழங்கப்படும்.  இவர்களை தவிர மற்ற அனைவருமே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் சரியான பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களையும் சரியாக வைத்திருப்பது அவசியம், மேலும் அவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்க படுவர்.


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வேயின் புதிய நடவடிக்கை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ