ஜாேதிடத்தின் படி, ஒருவரின் ஆளுமை மற்றும் அவரது எதிர்காலம் குறித்த துல்லியமான பகுப்பாய்வைக் கணிக்க முடியும் என்று பலர் நம்புகிறார்கள். ஒரு நபரின் ஒருவர் மீது காதல் கொள்ளும் விதம் மாறுபடலாம். குறிப்பிட்ட 5 ராசிகள் மட்டும், ஒருவரை எப்படி காதல் செய்ய வேண்டும் என்று அதிகமாக புதுப்புது வகை எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீனம்:


மீன ராசி உடையோர், பிறரை நன்றாக புரிந்து கொள்ளும் திறன் உடையவர்களாக இருப்பார்களாம். பிறரையே பெரிதாக புரிந்து கொள்ளும் போது, தனது அன்புக்குரியவர்களை இவர்கள் புரிந்து கொள்வது மிகவும் சிரமமா என்ன? தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்காதவர்கள் இவர்கள். காதல், அன்பு, இரக்கம் என தனது அன்புக்குரியவரிடம் தனது அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவர். காதல் விஷயம் என்று வந்துவிட்டால் இவர்கள் அதில் பயங்கர ரொமாண்டிக் ஆக இருப்பார்களாம். 


துலாம்:


அனைத்தையும் சமநிலையுடன் பார்க்கும் பக்குவம் கொண்டவர்கள், துலாம் ராசிக்காரர்கள். இவர்கள், அனைத்து உறவுகளையும் மிகவும் அழகாக தனது வாழ்நாள் முழுவதும் எடுத்து செல்வார்கள். தனது அன்புக்குரியவர்களுடன் நன்றாக நேரம் செலவிடுவதற்கு நிறைய முயற்சி செய்வர். 


மேலும் படிக்க | டீ குடிக்கும் போது இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! பல நோய்களுக்கு உள்ளாக கூடும்!


கடகம்:


காதல் உறவு என்று வந்து விட்டால், அதை பாதுகாத்துக்கொள்ளவும், அதை வளர்த்துக்கொள்ளவும் நிறைய முயற்சி எடுப்பவர்கள், கடக ராசிக்காரர்கள். தந்து அன்புக்குரியவருக்கு அக்கரையும் மரியாதையையும் கொடுப்பர். இவர்கள், ஒரு உறவில் இருந்தால் அதில் முழு மனதுடன் இருப்பார்களாம். திருமண நாள், ஆண்டு விழா, வெளியில் செல்வது என எதாக இருந்தாலும் அதை மிகவும் அக்கறையுடன் திட்டமிடுவர். அடிக்கடி, தனது காதலன் அல்லது காதலிக்காக பரிசுகள் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். 


சிம்மம்:


சூரிய பகவானால் ஆட்சி செய்யப்படும் ராசி, சிம்மம். இவர்கள், காதல் உறவில் மிகவும் கை தேர்ந்தவர்களாக இருப்பார்களாம். வாழ்க்கையயும் அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். யாரையும் போய் காதலுக்காக ஈர்க்கவில்லை, இவர்கள் மூலமாகவே பலர் ஈர்க்கப்படுவர். இவர்களுடன் இருப்பவர்கள், எப்போதும் நன்றாக காதலிக்கப்பட்டதாக உணருவர். 


ரிஷபம்:


ரிஷப ராசிக்காரர்களுக்கு காதலிப்பது கைவந்த கலையாக இருக்குமாம். யாருடன் இவர்கள் நட்பு பாராட்டினாலும், அன்பு செலுத்தினாலும் அவர்களீன் மனங்களில் நிலைத்து நின்ரு விடுவார்கள். இவர்கள் எப்போதும் தனது அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் ஒன்று என்றாலும் அவர்களுடன் தோள் கொடுத்து நிற்பர். தனது காதலை வெளிப்படுத்த தயங்காத இவர்கள், தனது அன்புக்குரியவரும் அதே போல இருக்க வேண்டும் என்று நினைப்பார்களாம். 


மேலும் படிக்க | மனதளவில் பலமாக இருப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை பின்பற்றுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ