ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து கவிஞர் வைரமுத்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்குல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், 


பத்ம விருதுகள் பெறும் 
85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.


பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன். 


என்று குறிப்பிட்டிருக்கிறார்.