எசெக்ஸ்-இந்தியா பயிற்சி ஆட்டத்தின் போது விராத் கோலியுடன் விஜய் மல்லையா இருக்கும் புகைப்படம் அனைவரையும் குழப்பி வருகிறது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி டி-20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. டி-20, ஒருநாள் போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி ( செவ்வாக்கிழமை) முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து எஸெக்ஸ் அணியுடன் மூன்று நாள் பயிற்சிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில், கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ரசிகர்களுடன் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் விஜய் மல்லையாவை போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின் தோள் மீது விராட் கோலி கை வைத்து நிற்கிறார். இந்திய வங்கிகளில் 9,000 கோடிக்கும் மேல் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவுடன் கேப்டன் விராட் கோலி போஸ் கொடுப்பதா என நெட்டிசன்கள் ஒரு சிலர் பொங்கி எழுந்துவிட்டனர். 



இந்த ‘புகைப்படத்தில் இருப்பவர் விஜய் மல்லையா அல்ல, அவரது சாயலில் இருப்பவர் மட்டுமே என்று ஒரு சில ரசிகர்களும் கருத்துத் தெரிவித்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.