இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, இத்தம்பதியருக்கு இரண்டு இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டனர். அதன்படி நேற்று (21-ம் தேதி) டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து வரவேற்பு நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி மும்பையிலும் நடைபெறுகிறது. 


அதன்படி நேற்று டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் டார்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. 


இந்நிலையில், நேற்று டெல்லியில் புதுமண தம்பதிகளான விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.


வீடியோ: