நவராத்திரி பண்டிகை முதல் நாள் சிறப்பு வழிப்பாடு: நவராத்திரி பண்டிகை ஆண்டு தோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு நவராத்திரி (Navaratri) பண்டிகை, அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது இன்று துவங்குகிறது. அக்டோபர் 23 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ஆம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. எனவே இந்த நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவராத்திரி பண்டிகை 2023:
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். அதேபோல் கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.


மேலும் படிக்க | நவராத்திரி 2023: கொலு படிகள், கலசம் அமைக்க சரியான தேதி, நேரம்


நவராத்திரியின் ஒன்பது நாட்கள்:
நவராத்திரியின் (Navaratri 2023) ஒன்பது நாட்களும் சக்தி தேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ணமையமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.


​நவராத்திரி பூஜை தொடங்குவதற்கான நேரம்:
அக்டோபர் 15 ஆம் தேதி காலை 06.05 மணி முதல் 11.45 மணி வரையிலான நேரத்திற்குள் கொலு படிகள் அடுக்கி, ஏதாவது ஒரு நைவேத்தியம் படைத்து, நவராத்திரி பூஜையை துவக்கி விட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் நவராத்திரி பூஜை செய்யலாம். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து பூஜை செய்ய வேண்டும். காலை பூஜையை 9 மணி அல்லது 10 மணிக்கு நிறைவு செய்து விட வேண்டும். அதேபோல் மாலை பூஜையை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.


நவராத்திரி பூஜை முதல் நாள்:
அம்பாள்: மகேஸ்வரி
கோலம்: அரிசி மாவினால் பொட்டு வகை கோலம் இட வேண்டும்,
மலர்கள்: மல்லிகை
நெய் வேத்தியம் : வெண்பொங்கல் அல்லது சுண்டல் படைத்து வழிபட வேண்டும்
பாட வேண்டிய ராகம் தோடி
பூஜை நேரம்: காலை, 09:15 - 10:15 மணி வரை; மாலை 4:45 - 5:45 மணி வரை.
இந்த நாளில் அம்மனுக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். அதேபோல் நாமும் பச்சை நிற உடை உடுத்து பூஜை செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | தோல்வியை கண்டால் பயந்து நடுங்கும் ‘அந்த’ 5 ராசிக்காரர்கள்..! யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ