குழந்தைகள் கலகலவென சிரிப்பதை பார்ப்பதற்கும், சந்தோஷமாக விளையாடுவதை பார்ப்பதற்கும் அனைவருக்கும் பிடிக்கும். அவர்கள் கை குழந்தையாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால், அவர்கள் மூன்று அல்லது 4 வயதிற்கு வந்த பிறகுதான் உண்மையான பிரச்சனை ஆரம்பிக்கும். பேச்சு வருவதற்கு முன்னரே அவர்களுக்கு கோபம், ஆனந்தம், பிடிவாதம் போன்ற பல உணர்ச்சிகள் ஒட்டிக்கொள்ளும். தனக்கு ஒரு பொருளோ அல்லது விஷயமோ வேண்டுமென்றால் அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதற்காக அழுது புரளுவது, விழுந்து புரண்டு அழுவது போன்ற விஷயங்களை செய்வர். பெற்றொர்கள், சில சமயங்களில் அவர்கள் அழக்கூடாது என்பதற்காக குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுத்து விடுவர். ஆனால் அனைத்து சமயங்களிலும் அதையே செய்து கொண்டிருக்க முடியாது. இதை சமாளிப்பது எப்படி? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேசாமல் இருங்கள்:


குழந்தைகள் வளரும் போது அவர்களுடன் சேர்ந்து குறும்பு தனமும் வளரும். அவர்களிடம் அதிகமாக பேசுவதே வீண். அவர்கள் எதையாவது கேட்டு அடம் பிடிக்கும் போது அமைதியாக இருங்கள். அது ஏன் அவர்களுக்கு வேண்டாம், அது வாங்கி கொடுத்தால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தால் நீங்கள் பொறுமை இழந்து விடுவீர்கள். எனவே, அவர்கள் அது போல செய்யும் போது அமைதியை கடைப்பிடியுங்கள். அவர்களிடம் மீண்டும் மீண்டும் பேசுவதால் மேலும் பிடிவாதமாக மாறுவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எது கேட்கிறார்களோ அதை வாங்கி கொடுப்பதை விட்டு விட்டு, அவர்களுக்கு எது தேவை என நீங்கள் நினைக்கிறிரீர்களோ, அதை மட்டும் வாங்கி கொடுங்கள். இதனால் அவர்களே புரிந்து கொள்ளும் போக்கை வளர்த்து கொள்கிறார்கள். 


மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?


கோபத்தை வெளிக்காட்ட வேண்டாம்...


குழந்தைகள், ஆறு அறிவுள்ள சிறு மனிதர்கள்தான். அவர்கள் வளர வளர அவர்களின் இந்த பிடிவாத குணமும் மறைந்து போகும். அவர்களை அன்பால் மட்டுமே மாற்ற முடியும். எனவே, அவர்கள் பிடிவாதம் பிடிக்கும் போது உங்கள் நாள் எப்படி இருந்தாலும், எவ்வளவு கோபமாக இருந்தாலும் அதை குழந்தையிடம் காட்டாதீர்கள். இது, அவர்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி விடும். 


கோபம் அதிகம் வந்தால், அவர்களை அடிக்கவும் தோன்றும். எனவே, அப்படி தோன்றும் போது அவர்கள் இருக்கும் அறையை விட்டு வெளியேறி விடுங்கள். அடிக்க கை ஓங்குவது, அடிப்பது போல செய்கை செய்வது போன்றவற்றை செய்ய வேண்டாம். 


தவறுகளை எடுத்துரையுங்கள்..


பிடிவாதம், கோபம், அழுகை போன்ற உணர்ச்சிகளுக்கு பிறகு அவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுவீர்கள். அவர்கள் அப்போது அமைதியாவார்கள். அந்த சமயத்தில் நீங்கள், அவர்கள் செய்த தவறினை சுட்டிக்காட்ட வேண்டும். அவர்களின் செயலால் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள், இவ்வாறு தொடர்ந்து செய்தால் எந்த மாதிரியான விளைவுகள் வரும் என்பதை எடுத்துரையுங்கள்.


மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசினால் என்ன செய்வது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ