காதல் என்பதை வெறும் வார்த்தையல்ல. உணர்ச்சியின் சங்கமம். அதனை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் காதலின் வீரியம் என்னவென்று. காதல் இல்லாத பதின்பருவத்தை யாரும் கடந்திருக்க முடியாது. குறிப்பாக, இளம் தலைமுறையினரிடையே இந்த காதல் மோகம் அதிகம் இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை காதலில் இருக்கும்போது நொடி பொழுதுகூட காதலனை அல்லது காதலியை விட்டு பிரிந்து இருக்கக்கூடாது என நினைப்பார்கள். இப்படியான சூழலை எதிர்கொள்ளும் பெண்கள், தங்கள் காதலை விட்டு பிரிந்திருக்கும் நேரத்தில் அவர்களின் கற்பனை உலகமானது ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் இந்த 7 விஷயங்களை கண்டிப்பாக செய்வார்களாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒன்றாக இருந்த நேரம்


இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தை நினைவில் திரும்ப திரும்ப கொண்டு வந்து, அந்த தருணத்தை நினைத்துக் கொண்டிருப்பார்களாம். அப்போது இருவரும் பேசிக் கொண்ட விஷயங்கள், எதிர்கால திட்டங்கள் நினைவுகளாக பெண்கள் மனதில் ஓடும். தனிமையை கடக்க மிகவும் கடினப்படும் அவர்கள், அந்த நினைவுகளை ஞாபக்கப்படுத்தி, காதலன் அருகில் இல்லாத குறையை போக்கிக் கொள்வார்களாம். 


மேலும் படிக்க | விமான பயணிகளுக்கு ஓர் நற்செய்தி! விமான கட்டணங்கள் குறைய வாய்ப்பு..!!


சமூக ஊடகங்கள்


காதலனை உடனடியாக சந்திக்க முடியாத சூழலில் இருக்கும் பெண்கள், தொலைப்பேசியை அடிக்கடி எடுத்து பார்ப்பார்கள். காதலன் அழைக்க மாட்டார் என்று தெரிந்தும் அதனை செய்வார்களாம். மேலும், காதலின் புகைப்படத்தை எடுத்து பார்க்கும் அவர்கள், சமூக ஊடகங்களில் இருக்கும் காதலின் பக்கத்துக்கு சென்று, அவரின் கடந்த கால நிகழ்வுகள் குறித்த போஸ்டுகளை பார்ப்பார்களாம். எப்படியாவது தன்னை ஒருமுறை தொடர்பு கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பும் பெண்களிடத்தில் இருந்து கொண்டே இருக்கும். 


திரைப்படம்


தனியாக இருக்கும் போது காதல் படங்கள் மற்றும் பாடல்களை பெண்கள் அதிகம் கேட்பார்களாம். படத்தில் வரும் பெண் கதாப்பாத்திரத்தோடு தங்களை ஒப்பிட்டு, ஹீரோவுடன் காதலனை ஒப்பிட்டு மகிழ்வார்களாம். படத்தில் அல்லது பாடல்களில் வரும் சின்ன சின்ன காதல் விளையாட்டுகளை எண்ணி, தங்களுக்குள் நடந்ததுபோல் கற்பனை செய்துகொள்வார்களாம். 


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு குருவின் அருளால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்


கிஃப்டுகளை பார்த்தல்


காதல் வாழ்க்கையில் இருக்கும் இளம் தலைமுறையினர், காதலனை பார்க்க முடியாதபோது அவர்கள் அளித்த பரிசு பொருட்களை எடுத்து பார்த்து பூரித்துக் கொள்வார்களாம். எந்த நேரத்தில், எப்படியான தருணத்தில் காதலன் தனக்கு பரிசளித்தான் என்பதை எண்ணிப் பார்த்து, அப்படியான தருணம் மீண்டும் ஒருமுறை கிடைக்க வேண்டும் என தங்களுக்குள்ளே எண்ணிக் கொள்வார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR