நள்ளிரவில் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் தூங்கிய ஆண் நண்பரை பழிவாங்க வீட்டிற்கு தீ வைத்த பெண்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். இந்நிலையில், உடலுறவு வைத்துக்கொள்ளாமல் தூங்கிய ஆணை பழிவாங்க வீட்டிற்கு தீ வைத்த பெண்ணின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும், 29 வயதான தைஜா ரஸ்ஸெலு என்பவருக்கும் இடையே உறவு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், அண்மையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த துணையை தைஜா ரஸ்ஸெல் உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடலுறவு கொள்வதற்கு ரஸ்ஸெல்லின் துணை மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தைஜா கண்டபடி திட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்படியிருந்தும் அவர், தூங்குவதில் தீவிரமாக இருந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறியும் அவரால் அந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இதற்கு தக்க பதில் தர வேண்டும் அவரை தூக்கத்தை விட்டு பதறி அடித்துகொண்டு வெளியேறும்படி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக கொஞ்சம் மண்ணென்னெய் , லைட்டரை வாங்கியுள்ளார். வீட்டின் கூரை மேல் மண்ணெய் ஊற்றி வீட்டை பற்ற வைத்துள்ளார். தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது. திடீரென விழித்துக்கொண்ட அவர் வீடு பற்றி எரிவதை கண்டறிந்து வீட்டு மர ஜன்னலை உடைத்துகொண்டு வெளியேறியதில் உயிர் தப்பியுள்ளார்.


இந்த சம்பவம் காலை நான்கு மணியளவில் நடந்துள்ளது. உடனே போலீஸ் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துள்ளனர். சுமார் 4.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். விசாரணையில், அவர் அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கு தகாத உறவு இருந்ததும், அவர்தான் உடலுறவுக்கு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு தூங்கியதாகவும் தெரிய வந்துள்ளது.