இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாட மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை பூனம் பாண்டே!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர். இப்போது அந்த தாக்கம் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து நடிகைகளிடமும் வந்துவிட்டது. 


இந்நிலையில், இந்த தாக்கம் நடிகை பூணம் பாண்டேவையும் தாக்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் மிகவும் ஆபாசமாக நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தையும் தன் பக்கம் இழுத்தவர் பூணம் பண்டே. 


இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே இந்திய அணிக்காக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். உலகக் கோப்பை தொடரின் 14-வது போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அபாரமாக விளையாடிய இந்திய அணி, 352 ரன்கள் குவித்தது அபார வெறி பெற்றது. 



இதையடுத்து, கண்ணாடி போன்ற மேலாடை அணிந்து, படுக்கையில் இருக்கும் அரைகுறை ஆடையுடனான‌ ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "இந்த படம் இந்திய கிரிக்கெட் அணிக்காக" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் வசமாக சிக்கிய பூனம் பாண்டேவை சமூக வலைதளத்தில் கருத்துக்களால் வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிஷன்கள். இதையடுத்து, இந்திய அணிக்காக அவர் பதிவிட்ட புகைப்படத்தை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார். 





இவர் வெறும் கவர்ச்சியான புகைப்படம் மட்டும் அல்ல, படு கவர்ச்சியான வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை அவரது முழுநேர வேலையாக வைத்துள்ளது நன்றாக தெரிகிறது.