ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷூ பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0. லைக்கா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. படத்தின் புரமோஷனுக்காக படக்குழு உலக சுற்றுலா ஒன்றையும் நடத்தி வருகிறது. 


`2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா சூப்பர் ஸ்டார் பிறந்தநாளான வருகிற டிசம்பர் 12-ஆம் பிரமாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், `2.0' படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் அதிக பொருட்செலவில் வாங்கியிருப்பதாக லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம் அவரது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். இது ஒரு வரலாறு படைக்கும் கூட்டணி என்றும் அவர் கூறியிருக்கிறார்.