Ajith Kumar Chennai Return Reason : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்குள் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர், தற்போதுத விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் இடையிலேயே தடைப்பட்டதை தொடர்ந்து, அஜித் வெவ்வேறு பட ப்ராஜெக்டில் கமிட் ஆனார். இதையடுத்து மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு:


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான கையுடன் நடிகர் அஜித் தனது பைக்கில் டூர் செல்ல ஆரம்பித்தார். ஒரு பக்கம் அஜித் டூர் சென்றதால்தான் விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமானதாக கூறப்பட்டாலும், இன்னொரு பக்கம் அஜித் டூர் சென்றதே படப்பிடிப்பு தாமதமானதால்தான் என்று கூறப்படுகிறது. எது எப்படி இருப்பினும் பட வேலைகள் மட்டும் லேட்டாகத்தான் ஆரம்பித்தன. 


சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித்துடன் நடிகர்கள் ஆரவ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகை ரெஜினாவும் படப்பிடிப்பில் சில நாட்களுக்கு பின்னர் கலந்து கொண்டாராம். 


படப்பிடிப்பில் தாமதம்..!


இயக்குநர் மகிழ் திருமேனி, தான் இயக்கும் படங்களை நேரமெடுத்து, பொறுமையாகத்தான் எடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால், அஜித்தை பொறுத்தவரை படப்பிடிப்பு ஆரம்பித்தால் அது வெகு விரைவில் முடிந்து விட வேண்டும் என்று யோசிப்பாராம். இதனாலேயே படப்பிடிப்பு தாமதமானதால் அஜித் கடுப்பானதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இயக்குநரும் தனது ரசிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்க சைன் செய்தார். இதையடுத்து, இடையில் நின்று போன விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. 


சென்னைக்கு திரும்பிய அஜித்குமார்..


நடிகர் அஜித்குமார், சில நாட்களுக்கு முன்னர் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கலந்து கொள்வதற்காக மீண்டும் படக்குழுவுடன் அஜர்பைஜானுக்கு சென்றார். இந்த நிலையில், நேற்று திடீரென்று சென்னைக்கு திரும்பினார். அஜித், அவரது பங்கு படப்பிடிப்பினை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் என மக்கள் நினைத்துக்கொண்டிருக்க அவர் தனிப்பட்ட வேலையாக திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | தன்னை விட 30 வயது இளைய நடிகைக்கு ஜோடியாகும் அஜித்?! யார் தெரியுமா?


ஷாலினிக்காக..


நடிகர் அஜித்குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினிக்காகத்தான் என்று கூறப்படுகிறது. ஷாலினிக்கு முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று நடைப்பெற்றதாகவும் அப்போது அஜித் அவருடன் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், தன்னால் இனியும் லேட்டாக கூடாது என்று நினைத்த அஜித், படப்பிடிப்பில் இருந்தவாறே மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொலைப்பேசி இணைப்பில் அவ்வப்போது இருந்ததாகவும் மனைவிக்கு அருவை சிகிச்சை நடைபெற்ற பின்பு மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு தளத்திலும் அவர் கொஞ்சம் பதட்டமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 


இந்த நிலையில், தனது மனைவியை பார்க்கத்தான் தற்போது அஜித் சென்னைக்கு திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பலரை நெகிழ்ச்சியுடன் உணர செய்துள்ளது. 


மேலும் படிக்க | விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்! அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பிய அஜித்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ