இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸின் டெல்டா வேரியண்ட் மற்றும் ஒமிக்ரான் வேரியண்ட் என இரு வேரியண்டுகளும் ஒரே நேரத்தில் வேகமாக பரவி வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்கள் பாதிப்புக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஓ சொல்றியா பாட்டு பாக்க ஆசையா? ரிலீஸ் தேதி அறிவிப்பு


தமிழகத்திலும் ஞாயிற்றிக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் பன்மடங்கு வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, திங்கட்கிழமை பாதிப்பை ஒப்பிடும்போது செவ்வாய்கிழமை பாதிப்பு ஓப்பீட்டளவில் சுமார் ஆயிரத்தைக் கடந்தது. இந்த எண்ணிக்கை எச்சரிக்கை மணியாக அமைந்ததால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.



ALSO READ | கொரோனா பரவல்; தள்ளிவைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்கள்


இந்நிலையில், தமிழகத்தின் பிரபல நடிகரான அருண் விஜய் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில், தான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR