கார் மோதி விபத்துக்குள்ளான வழக்கில் நடிகர் ஜெய்யை இன்னும் இரண்டு நாட்களில் கைது செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், மது அருந்தி விட்டு, போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அவர் ஓட்டி வந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, குடிபோதையில் தனது சொகுசு காரை மோதி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்


இது தொர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவரும் பிரேம்ஜியும் அளவுக்கு அதிகமாக குடித்திருந்தது தெரியவந்தது மேலும் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை .


இது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜெய் இன்று ஆஜராக வேண்டும் . ஆனால் அவர் ஆஜராகாததால் பிடியாணையை நீடித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.