நேற்று முன்தினம், 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த குறிப்பிட்ட சில தமிழ் படங்களுக்கு விருது கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ரசிகர்களுடன் சேர்ந்து ஒரு நடிகரும் ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காததை நினைத்து சோகத்தில் இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய் பீம் படத்திற்கு விருது இல்லை..


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய் பீம். இதனை டிஜே ஞானவேல் இயக்கியிருந்தார். நடிகர் சூர்யா இந்த படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவரே இந்த படத்தை தயாரித்தும் வழங்கயிருந்தார். 1993ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியிருந்த படம், ஜெய் பீம். இதில் சாதிய ஒடுக்குமுறை, சாதி வெறி போன்ற விஷயங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன. இது, குறிப்பிட்ட சமூகத்தினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் வரவேற்பு அளித்தனர். 



நேற்று முன்தினம், 2021ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஜெய் பீம் படத்திற்கு ஏதேனும் ஒரு பிரிவில் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. தேர்தெடுக்கப்பட்டதில் ஒரு பிரிவில் கூட ஜெய் பீம் படத்திற்கு எந்த விருதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் டென்ஷனான ரசிகர்கள் “தேசிய விருது மதிப்பிழந்து விட்டது..” என்று போஸ்ட் போட ஆரம்பித்து விட்டனர். 


மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய ட்விஸ்ட்! இனி ஒரு வீடு அல்ல..இரண்டு வீடு..!


சோகமான நடிகர்…


தமிழ் சினிமாவிலும் பிரபலமான இருக்கும் தெலுங்கு நடிகர்களுள் ஒருவர், நானி. இவர், 2012ஆம் ஆண்டு வெளிவந்திருந்த “நான் ஈ” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தற்போது தெலுங்கு திரையுலகின் வளர்ந்து வரும் ஹீரோக்களுள் இவரும் ஒருவர். தெலுங்கு சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் ஹீரோக்களில் இருந்து மாறுபட்டவர் இவர். நானி, நேற்று தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில், தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். தெலுங்கு சினிமா உயர பறப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 



அடுத்து வந்த ஸ்டோரியில், #Jaibhim என்ற ஹேஷ்டேக்கை சேர்த்து இதயம் உடைந்தது போன்ற எமோஜியை அவர் சேர்த்திருந்தார். ஜெய் பீம் படத்திற்காக ரசிகர்கள் மட்டுமே பேசி வந்த நிலையில், ஒரு பிரபலமும் இது குறித்து பேசியிருப்பது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. 


ஜெய் பீம் படத்திற்கு மட்டுமல்ல..‘இந்த’ படங்களுக்கும் விருது இல்லை..


ஜெய் பீம் படம் மட்டுமன்றி, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இன்னும் இரண்டு படங்களுக்கும் தேசிய விருது கிடைக்கவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘கர்ணன்’ படத்திற்கும், பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கும் எந்த விருதும் வழங்கப்படவில்லை. குறிப்பாக கர்ணன் படத்திற்காக தனுஷிற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 


மதிப்பிழந்ததா தேசிய விருது..? 


நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்கவில்லை எனக்கூறி ரசிகர்கள் பலர் கொந்தளித்து வருகின்றனர். ஏனென்றால் இந்த வருடம் பல விருதுகள் கமர்ஷியல் படங்களுக்கே அதிகமாக கிடைத்துள்ளன. அதே சமயத்தில் மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களுக்கு ஒரு பிரிவில் கூட விருது கிடைக்கவில்லை. இதனால், “தேசிய விருது மதிப்பிழந்து விட்டதா?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெய்பீம், கர்ணன் ஆகிய படங்களுக்கு விருது கிடைக்காததற்கு ஏதேனும் அரசியல் பின்னணி காரணமாக இருக்குமோ என்றும் மக்களின் மனங்களில் சந்தேகம் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | மதிப்பை இழந்த தேசிய விருது? நல்ல தமிழ் படங்களை கண்டு கொள்ளாததால் ரசிகர்கள் ஆத்திரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ