நடிகர் விஷாலை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்கிறோம் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்திரிகையாளர்கள் பேட்டியில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை பற்றி தவறாகப் பேசியதாகக்கூறி நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கிடையே அவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பும் கோரினார். 


விஷால் மீது எடுக்கபட்ட நடவடிக்கையை தயாரிப்பாளர் சங்கம் தானாக முன் வந்து ரத்து செய்ய வேண்டும். விஷால் கூறிய கருத்தை மிகைபடுத்தி புரிந்து கொண்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம். ரத்து செய்யவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். இதற்கு ஒரு நாள் கெடு விதிக்கிறோம் என விஷாலின் வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்நிலையில் இன்று விஷாலின் சஸ்பெண்டை தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்தது. மேலும் விஷால் மன்னிப்பு கேட்டுகொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.