விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இன்று காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிப்பதை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமின்றி அடுத்ததாக அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்தை நினைத்தால் பதறுகிறது என அஜித் ரசிகர்கள் ஒருபக்கம் கூறிக்கொண்டிருக்கின்றனர். 



இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சென்னை தேவி தியேட்டருக்கு நேரில் சென்றனர்.


மேலும் படிக்க | 1000 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்தது கேஜிஎஃப் 2


அங்கு சென்ற அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



இதற்கிடையே தியேட்டரில் இருந்த ரசிகர்கள் நயன்தாராவை சூழந்துகொண்டதாகவும் இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் அங்கிருந்து கிளம்பிவிட்டார் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | நீ மிகவும் அழகாக இருக்க ஸ்ருதி! அழகை ஆராதிக்கும் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR