80கள் மற்றும் 90களில் முக்கிய நடிகராக இருந்தவர், ராஜ்கிரண். இவர், அடிதடி-சண்டை காட்சிகள் நிறைந்த படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடன் இணைந்து நடித்த போது தான் அழுததாக ஒரு நடிகை சமீபத்திய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை சங்கீதா:


1996ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம்,‘பூவே உனக்காக’. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர், நடிகை சங்கீதா. அந்த படம் இவரை பிரபலப்படுத்தியது என்றாலும், அதற்கு முன்னரே இவர் பல ஹிட் படங்களில் நடித்து ‘ஹிட் ஹீரோயின்ஸ்’ லிஸ்டில் இருந்தார். இவர் முதன் முதலாக அறிமுகமான படம், ‘என் ரத்தத்தின் ரத்தம்’. தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுத்த படங்கள் அப்போது மிகவும் குறைவு. அப்படி குறைவாக எடுக்கப்பட்ட படங்களில் தவறாமல் இருந்த நாயகி, சங்கீதா. 


திரையுலகை விட்டு விலகல்..


மலையாள நடிகையான சங்கீதா, தமிழ் திரையுலகில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களுக்காக விருதுகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து டாப் ஹீரோயினாக இருந்த இவர், 2000ஆம் ஆண்டிற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தான் திருமணம் செய்து கொண்டதால் படங்களில் இனி நடிக்கப்போவதில்லை என அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். சங்கீதாவை போல பல ஹீரோயின்கள் நடிக்க வந்து விட்டாலும் யாராலும் அவர் இடத்தை நிரப்ப முடியாமல் இருந்தது. பெரிய இடைவேளைக்கு பிறகு, சங்கீதா மீண்டும் திரையுலகிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது அவர் மலையாள திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து வருகிறார். இது குறித்த நேர்காணல்களிலும் கலந்து கொண்டு வருகிறார். 


மேலும் படிக்க | PVR INOXன் புதிய திட்டம்! மாதம் ரூ.699 செலுத்தி 10 படங்கள் பார்க்கலாம்!


ராஜ்கிரண் குறித்து சங்கீதா..


நடிகை சங்கீதா, ‘எல்லாமே என் ராசா தான்’ படத்தில் ராஜ்கிரண் உடன் இணைந்து நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த போது தான் 10ஆம் வகுப்புதான் படித்து கொண்டிருந்ததாகவும் தான் பார்ப்பதற்கு அப்போது மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததால் தனது உடல் எடையை கூட்டி நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறியுள்ளார். 



இதற்காக, தன்னை டயட் இருக்க வைத்து உடல் எடையை அதிகரிக்க வைத்ததாகவும் நடிகர் ராஜ்கிரணின் அலுவலகத்தில் இருந்துதான் சாப்பாடு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவித்த முட்டை, ஐஸ்கிரீம், மலைவாழைப்பழங்கள் என அனைத்தையும் ராஜ்கிரண் வற்புருத்தி சாப்பிடவைத்ததாகவும் அவர் கூறியுள்ளார், சில நாட்களில் பெரிய கேரியரில் சாப்பாடு வரும் போது அழுது கொண்டே சாப்பிட்டதாகவும் சங்கீதா குறிப்பிட்டுள்ளார். அந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததால்தான் தனக்கு அதன் பிறகு கிராமப்புற கதாப்பாத்திரங்கள் பல கிடைத்ததாகவும் சங்கீதா பேசியுள்ளார். இவர் கிராமப்புற பெண்ணாக நடித்த பல படங்கள் மெகா-ஹிட் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 


சங்கீதா தற்போது என்ன செய்கிறார்..? 


சங்கீதா 2000ஆம் ஆண்டு, ஒளிப்பதிவளர் எஸ்.சரவணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். 2014ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு, இந்த ஆண்டில் ‘சாவெர்’ எனும் படத்தில் நடித்தார். தற்போது பராக்கிரமம் எனும் இன்னொரு  மலையாள படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது. 


மேலும் படிக்க | அடேங்கப்பா செம வெயிட் பார்ட்டி தா.. அனிருத் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ