சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள திரைப்படம், தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் இயக்கியிருந்த இப்படத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தொடர் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், படக்குழு அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடா சர்மாவிற்கு கொலை மிரட்டல்!


கேரளாவை சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் வலுக்கட்டாயமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போல இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் பல தரப்பு மக்களிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, இப்படத்தின் நாயகி அடா சர்மா மற்றும் இயக்குநர் சுதிப்தோ சென் ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. சமீபத்தில் இந்த நடிகை சிறிய சாலை விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


போன் நம்பர் லீக்:


அடா சர்மாவிற்கு இன்ஸ்டாகிராமில் ‘jhamunda_bolte’என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மிரட்டல் கொடுக்கும் வகையில் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து, அந்த கணக்கிலிருந்து அடா சர்மாவின் தொலை பேசி எண் லீக் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, போன் நம்பரை வெளியிட்ட நபர் அடா சர்மாவின் புது நம்பரையும் வெளியிடுவேன் என அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல், அடா சர்மாவின் ரசிகர்களை கொதித்தெழ செய்துள்ளது. தொடர்ந்து பலர் அந்த கணக்கை ரிபோர்ட் செய்ததால் அந்த கணக்கு இப்போது இன்ஸ்டா பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Japan Update: கார்த்தி ரசிகர்களுக்கு ட்ரீட்..4 ஹீரோக்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஜப்பான்’ இண்ட்ரோ வீடியோ..!


அட சர்மா கூறுவது என்ன?


அடா சர்மா, இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளதாவது: “ஒரு பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டால் அவர் எந்த மனநிலையில் இருப்பாரோ அதே மனநிலையில்தான் நானும் இப்போது இருக்கிறேன். மற்றவருடைய வாழ்க்கைக்குள் நுழைந்து நிம்மதியை கெடுக்கும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரின் வக்ர புத்தியை வெளிகாட்டுகிறது. இது கேரளா ஸ்டோரி படத்தில் வரும் ஒரு சிறுமி கொடுமைப்படுத்தப்படும் காட்சியை எனக்கு நினைவூட்டுகிறது” என்று கூறியுள்ளார். 


“வேறு செய்லகளிலும் ஈடுபடுகிறார்..”


இந்த செயலில் ஈடுபட்ட நபர், அடா சர்மாவை இழிவு படுத்தும் நோக்கில் இன்னும் சில செயல்களிலும் ஈடுபடுவதாக அடா சர்மா தெரிவித்துள்ளார். இதை காவல் துறையினர்தான் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அடா சர்மா அவரது நம்பர் மாற்றியுள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட நபரை போலீஸார் விரைவில் கண்டுபிடிக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


200 கோடியை கடந்த கேரளா ஸ்டோரி:


ஆரம்பத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எல்லா பக்கமும் ஆரம்பத்தில் எதிர்ப்பு வந்தாலும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்படத்திற்கு மக்கள் திரையரங்கிற்கு படையெடுக்க தொடங்கினர். சில நாட்களுக்கு முன்னர், மொத்தமாக 200 கோடியை அள்ளி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனில் இப்படம் ஹிட் அடித்தது. 


மேற்கு வங்காளத்தில் ரிலீஸ்:


பல போராட்டத்திற்கு பிறகு, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மேற்கு வங்காளத்தில் சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு, அங்கே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அடா சர்மா, அங்குள்ள ரசிகர்களை சந்தித்து படம் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.


மேலும் படிக்க | Sivaangi: ‘குட்டி ஸ்ரேயா கோஷல்’ சிவாங்கிக்கு பிறந்தநாள் இன்று!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ