Amudhavum Annalakshmiyum Today Episode: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்‌. நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த அன்னலட்சுமி மாமியார் வேதநாயகி அன்னலட்சுமி வேலை வாங்கி வருகிறார். 


இன்றைய எபிசோடில் பாட்டி முடிவு என்ன சொல்ல போகிறார் என்கிற பதட்டத்துடன் அனைவரும் காத்திருக்க, பாட்டி பாயை எடுத்து போட்டு தூங்கப் போகிறார். இதனால் அனைவரும் ஷாக்காக பார்க்க, பாட்டி எனக்கு தூக்கம் வருது காலைல பார்த்துக்கலாம் என சொல்கிறார். 


அடுத்ததாக பாட்டி மாணிக்கத்தை அழைத்து நான் என்ன தீர்ப்பு சொல்லனும் என கேக்க, மாணிக்கம் நீங்க தான் சொல்லனும் என சொல்கிறார். மேலும் பாட்டி அவரிடம் அன்னம் அவ பையன் படிக்கனும். மருமக படிக்க கூடாதுன்னு நினைக்கிறா, அமுதா தான் படிக்கனும்னு நினைக்கிறா, எல்லாரும் இந்த வீட்டுல சுயநலமா யோசிக்கிறாங்க, இந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லாத நீ தான் சுயநலம் இல்லாம எல்லாருக்காகவும் யோசிக்கிற நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் என சொல்கிறார். 


மேலும் படிக்க | இது டைகரின் கட்டளை.. ஜெயிலர் படத்தின் 2வது சிங்கிள் அப்டேட் இதோ


இதனையடுத்து மாணிக்கம் பாட்டியிடம் அமுதா படிக்கனும்னு சொல்றது சுயநலமா என்னன்னு எனக்கு தெரியாது, ஆனா அமுதா இந்த வீட்டுக்காக எல்லாத்தையும் பண்ணிருக்கா, அவ இங்க வரலேன்னா இந்த வீடே சின்னாபின்னாமாயிருக்கும், அவ ஆசைப்பட்டு படிக்கனும்னு நினைக்கிறா அதை தடுக்குறது தப்புன்னு நான் நினைக்கிறேன் என சொல்கிறார். 


அதன் பிறகு சிதம்பரமும் செல்வாவும் செந்தில் வீட்டிற்கு வர, வடிவேலு சிதம்பரத்தை அவமானப்படுத்த, செல்வா வருகிறார். செல்வாவை பார்த்ததும் வடிவேலு பம்முகிறார், பாட்டி சிதம்பரத்தை பார்த்து எதுக்காக இங்க வந்துருக்கீங்க என கேக்க, உங்க முடிவு என்னன்னு தெரிஞ்சிக்கிடலாம்னு வந்தோம் என சொல்கிறார். 


இதனையடுத்து பாட்டி செந்திலிடம் அமுதாவை நல்லா பார்த்துப்பியா என கேக்க செந்தில் பார்த்துப்பேன் என சொல்ல பாட்டி பரமுவிடம் இனிமே இந்த வீட்டுலயே இருக்க கூடாது உடனே கிளம்பிரு என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | நான்கு மொழிகளில் உருவாகும் நானி- மிருணாள் தாகுரின் 'ஹாய் நான்னா'..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ