அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்த திரைப்படம் போர் தொழில். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார். இந்த படம் குறித்து படத்தின் நாயகன் அசோக் செல்வனிடம் சமீபத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதுகுறித்து அவர் பதிலளிக்கையில் அவர் போர் தொழில் இரண்டாம் பாகம் குறித்தும் பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுமுக இயக்குநரின் படைப்பு:


தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்களின் வரவு சமீப காலங்களில் அதிகரித்துள்ளன. அவர்களில் பலர், பலவிதமான புதிய பரிமாணங்களில் கதைகளை தங்களுக்குரிய ஹீரோக்களை வைத்து இயக்கி வருகின்றனர். ஒரு சில ஹீரோக்களின் புது இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கின்றனர். அப்படி புதுப்புது இயக்குநர்களுக்கு எப்போதும் தனது படங்களில் வாய்ப்பு தருபவர், அசோக் செல்வன். புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘போர் தொழில்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றது. 


மேலும் படிக்க | ரோலக்ஸை மையமாக வைத்து தனிப்படம்: சூர்யா


போர் தொழில் திரைப்படம்: 


சமீபத்தில் வந்த திரில்லர் திரைப்படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த படம், போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் கதை இது. இதில் பாதி படம் இரவிலேயே காட்சிபடுத்தப்பட்டிருந்தது. பெண்கள் காணாமல் போகும் காட்சிகள் ‘திக் திக்’ நிமிடங்கள் நிறைந்தவையாக இருந்தன. புதிதாக பணியில் சேர்ந்த காவல் அதிகாரியாக அசோக் செல்வன், காமெடியிலும் ஹீரோயிசத்திலும் அசத்தியிருந்ததார். படம் வெளியாகி 2 மாதங்கள் கடந்த நிலையிலும், படக்குழு எங்கு சென்றாலும் படக்குழு இதைப்பற்றி அவர்களிடம் பேசி வருகின்றனர். 


போர் தொழில் இரண்டாம் பாகம்: 


நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ‘போர் தொழில்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பலர் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பி வருவதாகவும் ஆனால் இதை இயக்கும் முடிவு இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறினார். மேலும், அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் அவர் தெரிவத்தார். 


படத்தின் வசூல்: 


போர் தொழில் படம், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வந்தது. நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் இருந்தனர். படத்தை எப்போதோ ஒடிடியில் வெளியிட இருந்த படக்குழு, அதன் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டு கொண்டே இருந்தது. இறுதியில், சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் ஓடிடி தளமான சோனி லிவ்வில் வெளியிடப்பட்டது. 


படம், மொத்தமாக 10 கோடிக்கும் குறைவான செலவிலேயே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படம் திரையரங்கில் ஓடி வந்த இறுதி நாள் வரை உலகளவில் 50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 


அசோக் செல்வனுக்கு திருமணம்: 


நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் திருமணம் செய்து கொள்ள உள்ளாராம். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் நடித்த போது நெருக்கம் ஏற்பட்டதாகவும், அப்போதிலிருந்து காதலித்து வரும் இவர்கள் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | குண்டானதால் நடிகைக்கு நேர்ந்த துயரம்! அய்யய்யோ..இவருக்கு இந்த நிலையா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ