கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியான படம் என்ற புதிய சாதனையை பாகுபலி-2 படம் படைத்து உள்ளது. இந்தப்படம் கேரளாவில் இன்று 290 தியேட்டர்களில் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் சில தியேட்டர் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் 330 தியேட்டர்கள் வரை பாகுபலி-2 வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் இன்று வெளியாகி உள்ளது.


இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்தியாவிலேயே அதிக செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக தொகைக்கு விற்பனையானதும், அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை கொண்ட இந்திய திரைப்படமும் இது தான்.


இந்நிலையில் கேரளாவில் அதிக தியேட்டர்களில் வெளியாகி பாகுபலி-2 படம் புதிய சாதனையை படைத்து உள்ளது.