விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில், இந்த வாரம் புதிய தொகுப்பாளராக ரம்யா கிருஷ்ணன் களம் இறங்கியிருக்கிறார். கொரோனா தொற்று ஏற்பட்டதால் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், அவருக்குப் பதிலாக தொகுத்து வழங்கும் ரம்யா கிருஷ்ணன், சனிக்கிழமை எபிசோடில் இந்த வாரம் முழுக்க நடந்த விசாரணையை தொடங்கினார். அதில் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கில் வார்டனாக செயல்பட்ட சிபியின் நடவடிக்கை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்! காரணம் என்ன?


வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் அவர் கருத்து கேட்டவுடன் ஒவ்வொருவராக எழுந்து, தங்களின் அபிப்பிராயத்தை பதிவு செய்தனர். இமான் அண்ணாச்சி பேசும்போது, பள்ளிக்கு செல்லாததால் வார்டன் எப்படி இருப்பார்கள்? என்பது தெரியாது. ஆனால், சிபி நடந்து கொண்டது எனக்கே கொஞ்சம் கடுப்பாக இருந்தது எனத் தெரிவித்தார். ஒரு சில இடங்களில் அவருடைய நடவடிக்கை பிடிக்கவில்லை எனத் தெரிவித்தார். பின்னர், அக்ஷ்ரா பேசும்போது, சிபி தனக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்ததாக கூறினார். தனிப்பட்ட பகையை வைத்துக் கொண்டு இப்படி பேசினாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் அப்படி தான் இருந்தது எனத் தெரிவித்தார்.


மற்ற போட்டியாளர்களில் சிலரும் சிபியின் வார்ட்ன் ஆக்டிங்கை விமர்சனம் செய்தனர். அப்போது, ஏன் சிபி இப்படி செஞ்சீங்க? என ரம்யா கிருஷ்ணன் அவரிடமே நேரடியாக கேட்டார். சிபியும், தன்னுடைய தரப்பு விளக்கத்தைக் கொடுத்தார். அதில் திருப்தியில்லாத ரம்யா கிருஷ்ணன், மாணவர்களை சேட்டை செய்யாமல் மட்டும் தானே பிக்பாஸ் பார்த்துக்கொள்ளச் சொன்னார். வார்டனான நீங்கள், எல்லா விஷயத்தையும் கட்டுப்படுத்தினீங்களே அது ஏன்? என கேள்வி எழுப்பினார். சிபி அதற்கு மழுப்பலான பதிலை கொடுக்க, குறும்படம் ஒன்னு இருக்கு தெரியுமா? சிபி  என ரம்யா கிருஷ்ணன் கேட்டார். அதற்கு பதிலளித்த சிபி, நான் பர்சனலா எதுவும் செய்யல மேடம், நீங்க குறும்படம் போடறதுனா போட்டுக்கோங்க எனக் கூறினார். 



இதில் கடுப்பான ரம்யா கிருஷ்ணன், நொடிப்பொழுதுகூட யோசிக்காமல், தனக்கே உரிய கெத்தான ஸ்டைலில் " நான் உங்க கிட்ட ஃபர்மிசன் கேட்கல சிபி" எனக் கூறி வாயடைக்க வைத்தார். அவரின் இந்த கெத்தான பதில், ரசிகர்களையும், ஹவுஸ்மேட்டையும் வெகுவாக ரசிக்க வைத்தது. பின்னர் வழக்கம்போல் விசாரணையை தொடங்கிய ரம்யா, சனிக்கிழமை எபிசோடை சுமூகமாக நிறைவு செய்தார். கமல் தொகுத்து வழ்ங்கிய பிக்பாஸை, அதே ஸ்டீரிமிங்கில் யாரால் தொகுத்து வழங்க முடியும்? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ரம்யா கிருஷ்ணன் தனக்கான ஸ்டைலில் சூப்பராக முதல் எபிசோடை நிறைவு செய்திருக்கிறார்.


ALSO READ பிக்பாஸிலிருந்து இந்தவாரம் வெளியேறுகிறாரா ஐக்கி பெர்ரி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR