பிக்பாஸ் தமிழ் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வீட்டில் போட்டியாளர்களாக இருக்கும் நிரூப், ராஜூ, தாமரை, பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் இறுதிக் கட்ட எலிமினேஷனில் உள்ளனர். அமிர் மட்டும் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த வாரம் மட்டுமே எலிமினேஷன் இருக்கும் நிலையில், டாப் 5-க்கான போட்டிக்களம் சூடுபிடித்துள்ளது. அதில் அமீரின் இடம் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டதால் எஞ்சியிருக்கும் 6 பேரில் நான்கு பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஆபாச வீடியோ பதிவிடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும்:இயக்குநர் பேரரசு


ஒருவர் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவார். இன்னொருவர் மணி டாஸ்க்கின் (MONEY TASK) மூலம் வெளியேறிவிடுவார். இந்த மணி டாஸ்க் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த வாரம் தொடங்கியுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் சரத்குமார் வீட்டிற்குள் சென்று மணி டாஸ்க்கை தொடங்கி வைத்துள்ளார்.


சரத்குமார் வீட்டிற்குள் சென்றதும் போட்டியாளர்கள் உற்சாகமடைந்தனர். வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் சூட்கேஸில் 3 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை யார்? எடுக்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேநேரத்தில் இப்போது வெளியாகியிருக்கும் புரோமோவில், சூட்கேஸில் இருக்கும் பணதை எடுக்க தயாராக இருப்பதாக நிரூப் கூறியுள்ளார். அதனால், மணி டாஸ்க் தொடக்கமே செம டிவிஸ்டாக தொடங்கியுள்ளது.


AL:SO READ | ’வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR