நடிகர் அஜித்திற்கான பாலிவுட் கதை தயாராக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னிடம் 3 இந்தி ஆக்‌ஷன் கதை தயாராக இருப்பதாகவும், அதில் ஒன்றிலாவது அஜித் நடிக்க ஒப்புக்கொள்வார் என போனி கபூர் ட்விட்டில் பதிவிட்டுள்ளார்!!


H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பாலிவுட்டில் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் உருவாகி வருகிறது.  யுவன் இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய போனி கபூர் தயாரித்து வருகிறார்.. 


இத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆன்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்தரன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஆகஸ்ட் 10 ஆல்  ரிலீஸ் செய்யப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலை முடிவடைந்துள்ளன. இதனை தொடர்ந்து படத்தின் சில  பணிகள் சில காட்சிகளை பார்த்து  மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட்டில் "விரைவில் அஜித் தனது இந்தி படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார்" என பதிவு செய்துள்ளார்.