தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘தெய்வம் தந்த பூவே' சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெய்வம் தந்த பூவே: எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தெய்வம் தந்த பூவே. இன்றைய எபிசோட்டில் கார்த்தி போட்ட திட்டம் என்ன? வினய், மித்ரா இடையே மீண்டும் மோதலா? இனி நடக்க போவது என்ன? தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட் குறித்து இங்கே பார்ப்போம்.


இந்த சீரியலில் கடந்த வாரம் கார்த்தி தன்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி கார்த்தி மித்ராவை வீட்டுக்கு கூட்டி வந்து தங்க வைக்க வினய்க்கு அவன் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.


மித்ராவை தங்க வைக்கும் கார்த்தி


அதாவது வினய் தன்யாவுக்கு உடல்நிலை சரியாகி விட்டதால் வீட்டுக்கு கிளம்பலாம் என பேச, கார்த்தி, ‘நீங்க போய்ட்டா தன்யாவுக்கு என்ன ஆகும்னு தெரியல இங்கேயே இருங்க’ என சொல்லி மித்ராவை தங்க வைக்கிறான்.



அதோடு எல்லோரும் சேர்ந்து ட்ரிப் ஒன்று செல்லாமல் என சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைக்கிறான். போகும் இடத்தில் வினய்யை கொன்று விட்டு மித்ராவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என திட்டம் போடுகிறான்.


இங்கே வினய் போகும் இடத்தில கார்த்தி நல்லவன் இல்லை என்பதை நிரூபித்து மித்ராவை வீட்டுக்கு அழைத்து சென்று சந்தோஷமாக வாழ வேண்டும் என பிளான் செய்ய காந்திமதி வினய், மித்ரா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு நல்லபடியாக வாழ வேண்டும் என நினைக்கிறாள்.


மேலும் படிக்க | மண்டபத்தில் சத்தியை காயப்படுத்தும் வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!


பிளான் போடும் கார்த்தி


அடுத்து எல்லாரும் ட்ரிப் கிளம்ப வினய், மித்ரா ஒன்றாகவே இருக்க இதனால் கடுப்பாகும் கார்த்தி வினய், மித்ரா பிரிவுக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து அதே போல் ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி இருவருக்கும் இடையே ஒரு சிறிய சண்டையை உருவாக்குகிறான்.



கார்த்தியின் திட்டம் பலிக்குமா? 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்தியின் திட்டம் பலிக்குமா? வினய்யின் முயற்சி ஜெயிக்குமா என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


தெய்வம் தந்த பூவே சீரியலை எப்படி பார்ப்பது?


தெய்வம் தந்த பூவே என்ற தமிழ் சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் மற்றும் ZEE5 தலத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. பல திருப்பங்களுடன் சுவாரசியமாக கதைக்களம் அமைந்துள்ள தெய்வம் தந்த பூவே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


மேலும் படிக்க | Maari TV Serial: பெண்ணாக வந்த அம்மன்.. தவிடுபொடியான ஜாஸ்மின் சூழ்ச்சி! நடந்தது என்ன?


மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ