90ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, எத்தனை ஆண்டுகளானாலும் மறக்காத இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர், விக்ரமன். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரமன்:


1990ஆம் ஆண்டு வெளியான  ‘புது வசந்தம்’ படம் மூலம் அறிமுகமானவர், விக்ரமன். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற குடும்ப கதைகளை எடுப்பதில் வல்லவர் இவர். விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூர்ய வம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. தற்போது உள்ள பல திரைப்பட இயக்குநர்கள் கூட இவர் படத்தை தங்களது படைப்புகளில் ரெஃபரன்ஸ் ஆக உபயோகிக்கின்றனர். ஒரு காலத்தில் புகழின் உச்சத்தி இருந்த இவர், தற்போது பெரிதாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, படங்களையும் எடுப்பதில்லை. 


மனைவிக்கு நேர்ந்த சோகம்..


இயக்குநர் விக்ரமனின் நெருங்கிய நண்பர் ஒருவர், சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், விக்ரமன் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர், விக்ரமனின் தற்போதைய குடும்ப சூழல் குறித்தும் கூறினார். 


விக்ரமன், ஜெயப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெயப்ரியா பிரபல நாட்டிய கலைஞர் ஆவார். இவருக்கி 5 ஆண்டுகளுக்கு முன்னர் முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அந்த அறுவை சிகிச்சையில் ஏதோ தவறு ஏற்பட்டதால் ஜெயப்ரியாவால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது. 


சொத்தை விற்று சிகிச்சை பார்க்க வேண்டிய நிலை..


தனது நிலை குறித்து ஜெயப்ரியாவே ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில், தனக்கு உடல் நிலை சரியில்லாத போது திரையுலகை சேர்ந்த யாருமே வந்து பார்க்கவில்லை என்றும் கே.எஸ்.ரவிகுமார் மட்டும்தான் தங்கள் குடும்பம் குறித்து விசாரித்ததாகவும் கூறியுள்ளார். இயக்குநர் விக்ரமன், பலருக்கு பல வகைகளில் உதவி செய்துள்ளதாக கூறும் அவரது நண்பர், அவருக்கென்று வந்துவிட்டால் யாரிடமும் சென்று உதவி கேட்க மாட்டார் என்று கூறியுள்ளார். மேலும், அவர் படங்கள் எதையும் இயக்காததால் தன்னிடம் இருப்பவற்றை விற்றுத்தான் தற்போது தன் மனைவியின் சிகிச்சைக்கான செலவுகளை பார்த்து கொள்வதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நெல்சனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்-சுட சுட அப்டேட்ட சொன்ன சினிமா பிரபலம்!


மனைவியிடம் செய்த சபதம்..


மேற்கூறியது போல இயக்குநர் விக்ரமன், படங்கள் எதையும் எடுப்பதில்லை. அவர், தன் மனைவி எழுந்து நடக்கும் வரை பேனாவையே பிடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. விக்ரமன், தன் மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவர் என்றும் அவரை பார்த்துக்கொள்வதற்காகவே வெளியில் எங்கும் பெரிதாக வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. சூர்யவம்சம் 2 படத்தை இயக்க சொல்லி அழைப்பு வந்த போதும், தன் மனைவிக்கா அவர் அந்த பிராஜெக்டை தள்ளிப்போட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. 


ஹீரோவாகவும் விக்ரமனின் மகன்..


விக்ரமனுக்கு விஜய் கனிஷ்கா என்ற மகன் உள்ளார். இவர், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தினை கே.எஸ் ரவிகுமார் தயாரித்து வழங்குகிறார். கடந்த ஆண்டே இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் நடைப்பெற்றது. இந்த படத்தில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 


மேலும் படிக்க | அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ