‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய படம் திரௌபதி. காதல் என்ற பெயரில் நடக்கும் போலி திருமணத்தை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் வெளியானஅப்படம் அப்பட்டமாக சாதிய மனநிலையோடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் ரீதியிலேயே படமாக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டும் விமர்சனமும் எழுந்தன. திரௌபதி படத்துக்கு பிறகு ருத்ரதாண்டவம் படத்தை இயக்கினார் மோகன் ஜி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தப் படமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகவே படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி விசிக தலைவர் திருமாவளவனை நேரடியாகவே விமர்சனம் செய்வதுபோல் காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் படமும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.


அதுமட்டுமின்றி மோகன் ஜி இதுபோன்ற படங்கள் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று ஒரு தரப்பினரும், எதற்காக நிறுத்த வேண்டும் அனைவருக்கும் இங்கு படைப்பு சுதந்திரம் உண்டென்று மறு தரப்பினரும் பேசினர். இதற்கிடையே மோகன் ஜியின் படங்கள் மட்டுமின்றி, தனியார் சேனலின் அலுவலகத்துக்கு சென்று மிரட்டியது, ஏதேனும் கேள்வி கேட்டால் பேட்டியை பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்புவது என்று அவரது செயல்பாடுகளும் விமர்சனத்தையும், ட்ரோல்கலையும் சந்தித்தன.



சூழல் இப்படி இருக்க திரௌபதி படத்தில் நடித்ததற்காக ஷீலா ராஜ்குமாரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் இப்படி சாதிய துவேஷம் உள்ள படங்களில் ஷீலா நடித்திருக்கக்கூடாது என்று கருத்தும் எழுந்தது. இதற்கிடையே அவர் காதல் திருமணமும் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் திரௌபதி படத்தில் நடித்தது தொடர்பாக ஷீலா ராஜ்குமார் பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



அந்த வீடியோவில், “திரௌபதி படத்தில் நடித்தது கெட்ட கனவாக இருக்கிறது. முழு கதையும் என்னிடம் சொல்லப்படவில்லை.இயக்குநர்கள் வெளிப்படையாக இருந்தால் நல்லது. இதையெல்லாம் எதிர்கொள்வதற்கு நானும் தயாராக இருப்பேன்.


மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் இயக்குநர் மணிரத்தினத்தை பிடித்த கொரோனா


என்னுடைய வேலையை என்னிடம் தெளிவாக கூறினால் அதை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை நான் எடுப்பேன். திரௌபதியை எனக்கு மிகப்பெரிய பாடமாக பார்க்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.



இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளவாசிகள், முழு கதையை நடிகையிடம் கூறாமல் ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டாரா மோகன் ஜி என கேள்வி எழுப்பிவருகின்றனர். மோகன் ஜி தற்போது செல்வராகவன், நட்டி உள்ளிட்டோர் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | மனிதர்கள் இல்லை.. அனிமேஷன் காட்சிகள் இல்லை.. பார்த்திபனின் அடுத்த புது முயற்சி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ