2.O படம் முதலில் திரைக்கு வரும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துபாயில் பிரமாண்டமாக ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு நாடு திரும்பி நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.


அப்பொழுது அவர் கூரியதாவது:-


‘முதலில் எந்த படம் வெளியாகும் ‘2.0’ அல்லது ‘காலா’ என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ரஜினி, “2.0 படம்தான் முதலில் திரைக்கு வரும்” என்றார். அதன் பிறகு தான் ‘காலா’ வரும் என தெரிவித்தார். அரசியல் சம்பந்தமான கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.


சமூக வலைதளங்களில் ‘காலா’  படம் தான் முதலில் திரைக்கு வரும். அதுவும் பொங்கல் அன்று என செய்தி பரவ தொடங்கியது. ஆனால் ‘காலா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதனை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.