Actor Marimuthu Passes Away: பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவுக்கு (56) இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 'எதிர் நீச்சல்' சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்த வடபழனி சூர்யா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தி திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


தேனிக்கு கொண்டுச்செல்லப்படும் உடல்


சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள பாஸ்கர் காலணியில் அவரது பூத உடலானது வைக்கப்பட உள்ளது. திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காகவும் வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் தேனியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இரண்டு படங்களை இயக்கியவர்


தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்த மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்துள்ளார். ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான மாரிமுத்து, சுமார் 6 வருடங்கள் கழித்து 2014இல் விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார். 



மேலும் படிக்க | 'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரனின் புது அவதாரம்..! ரஜினி டைலாக் பேசி மாஸ் காட்டிய மாரிமுத்து..!


நடிகர் அவதாரம்


இயக்குநராக செயல்பட்டு வந்த மாரிமுத்து, 2010ஆம் ஆண்டில் இருந்து நடிப்பிலும் கவனம் செலுத்தினார். அதற்கு முன்பே, வாலி, உதயா போன்ற படங்களில் தோன்றியிருந்தாலும் 2011ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.



அதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் அவர் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில், ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. 


உச்சத்தில் இருந்த மாரிமுத்து


சமீபகாலங்களில், சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த 'எதிர் நீச்சல்' தொடரில் நடித்ததன் மூலம் பரந்துபட்ட அளவில் அவர் பிரபலமானார். அவரின் 'ஏ... இந்தாம்மா' என்ற சிக்னேச்சர் வசனமும் மீம் மெட்டீரியலாக இணையத்தை கலக்க ஆரம்பித்தன வலம் வந்துகொண்டிருந்தது. அந்த வகையில், மாரிமுத்து திடீரென டிரெண்டானார்.



இவை மட்டுமின்றி அவரின் தனிப்பட்ட பேச்சுகள் இணையத்தில் அதிக வரவேற்பை பெற்றன. அவரின் தமிழ் உச்சரிப்பும், நேர்த்தியான உடல்மொழியும் பார்வையாளர்களை எளிமையாக கவர்ந்திழுக்கும் தன்மைகொண்டது.


மேலும் படிக்க | பண மோசடி செய்ததாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கைது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ