விஜய்யின் கேரியரில் திருப்பாச்சி, சிவகாசி முக்கியமான படங்கள். அதிரிபுதிரி ஹிட்டடித்த அந்தப் படங்களை இயக்கியவர் இயக்குநர் பேரரசு. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு விஜய்யின் கிராஃப் உச்சம் செல்ல அவரது வியாபாரம் பன்மடங்கு உயர்ந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொடர்ந்து தமிழின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக திகழும் விஜய் சமீபத்தில் பீஸ்ட் படத்தில் நடித்தார். நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. மேலும் விஜய்யை நெல்சன் ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.



விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். பீஸ்ட்டில் விட்டதை விஜய் இந்தப் படத்தில் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | மீண்டும் தள்ளிப்போனது மாமனிதன் பட ரிலீஸ்


இந்நிலையில் இயக்குநர் பேரரசு விஜய்யை வைத்து படம் இயக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விஜய்க்காக மூன்று கதைகளை ரெடி செய்து வைத்துள்ளேன்.



கடந்த இரண்டு வருடங்களாக விஜய்யை பின்தொடர்கின்றேன். இருப்பினும் தற்போது அவரின் மார்க்கெட் வேறு படத்தின் பட்ஜெட் வேறு. அவர் மீண்டும் பேரரசுவின் படத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்தால் நான் அவரை இயக்க தயாராகவுள்ளேன். இதுதொடர்பாக அவர்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார். 


மேலும் படிக்க | தோனியின் அதிரடியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR