தெலுங்கில் 'ஓஹலுஸ் குசாகுலாடேட்' திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் அதன் கதை மற்றும் மேக்கிங்கிற்காக பாராட்டை பெற்றது.  'இமைக்கா நொடிகள்' , அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை-3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரசிகர்கள் பலரும் தற்போது பிரபலங்களிடம் இணையம் மூலம் கேள்விகளை எழுப்புவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.அவ்வாறு நடிகை ராஷிகன்னாவிடம் இணையதளத்தில் ரசிகர்கள் அவரது எதிர்கால கணவர் குறித்த கேள்வியை எழுப்பினர்.  அக்கேள்விக்கு  நடிகை ராஷிகன்னா பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன்.



எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.மேலும் எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும்.  குறிப்பாக தமிழில் விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரையும் பிடிக்கும்.



அதுமட்டுமல்லாது அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட விருப்பம் உள்ளது. கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும் பிடித்தவர்கள் என்று கூறியுள்ளார்.


ALSO READ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR