அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் உலக அளவில் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.  2023ம் ஆண்டில் ஷாருக்கானுக்கு இது இரண்டாவது 1000 கோடி வசூல் செய்த படமாகும்.  ஏற்கனவே வெளியான பதான் படமும் அதிக வசூல் செய்து இருந்தது.  ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.  அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே ராஜா ராணி படத்தில் நடித்து இருந்தா நயன்தாரா, ஜவான் படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார்.  இந்த படத்தில் நயன்தாராவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது.  அதில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.  இந்நிலையில், ஜவான் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 'ஜவான்' படம் இந்தியாவில் ரூ.640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, அதேசமயம் உலகம் முழுவதும் ரூ.1146 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் விக்ரமன் மனைவி-கண்டுகொள்ளாத பிரபலங்கள்!



கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் 'KH234' படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றதற்கான வீடியோ வெளியானது.  கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படத்தில் நயன்தாரா ரூ.12 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  'ஜவான்' மற்றும் 'இறைவன்' படங்களுக்குப் பிறகு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இந்த இரண்டு படங்களுக்கும் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.  மேலும், தமிழில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்தார்.  


2022-ம் ஆண்டு வெளியான ‘கனெக்ட்’ படத்திற்காக நயன்தாரா 8 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.  2016 ஆம் ஆண்டு நயன்தாரா நடித்த தெலுங்கு படத்தில் வாங்கி சம்பளத்தை விட தற்போது வாங்குவது ஆறு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் படத்தில் முதலில் சமந்தா, சாய் பல்லவி மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் இடம் முதலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இருப்பினும், இந்த படத்தில் நடிக்க நயன்தாரா முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. 


படத்தில் நடிப்பது மட்டும் இன்றி நயன்தாரா தொழில் முனைவோராகவும் இருந்து வருகிறார். நயன்தாரா தற்போது பெண்களுக்காக புதிய பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார். 9ஸ்கின் என்ற சருமப் பராமரிப்பு பிராண்டை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தொழிலதிபர் டெய்சி மோர்கன் ஆகியோருடன் இணைந்து தொடங்கி உள்ளார். 9 ஸ்கின் பெண்களின் அழகு மற்றும் சுய பராமரிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிரீமியம் ஸ்கின் புரோடக்ட்ஸ்களை வழங்குகிறது. மேலும் இந்த தயாரிப்பு இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்கும். 9ஸ்கின் பிராண்டில் இரண்டு வகையான சீரம், இரண்டு வகையான கிரீம் மற்றும் ஒரு எண்ணெய் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.999ஆக உள்ளது, அதிகபட்சம் ரூ.1,899ஆக உள்ளது. 


மேலும் படிக்க | நெல்சனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் விஜய்-சுட சுட அப்டேட்ட சொன்ன சினிமா பிரபலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ