ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நின்றிருந்த படப்பிடிப்பு வாகனங்களை புகைப்படம் எடுத்த செய்தியாளர்கள் மீது படக்குழுவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக 2.0 படத்தின் டைரக்டர் ஷங்கரின் உதவியாளர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், உதவி இயக்குனர்கள் அலெக்ஸ், சுந்தர்ராஜன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இரவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிவிட்டு பகலில் படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. படப்பிடிப்பு வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவே இதனை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.