தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரியா கார்த்திக்கு போன் செய்து டீல் பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, ஒரு பக்கம் ரம்யா தீபாவை காணவில்லை என்று தேடுகிறாள். இன்னொரு பக்கம் அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்க அருண் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்கிறான். 



தீபா வீட்டில் இல்ல, நான் மட்டும் தனியா தான் இருக்கேன் என்று அருணை வீட்டிற்கு கூப்பிட அவன் ஐஸ்வர்யாவை திட்டி போனை வைக்கிறான். 


அதன் பிறகு கார்த்திக் தீபாவை தேடி செல்லும் போது வழியில் மாணிக்கத்தை பார்க்கிறான், மாணிக்கம் ரம்யாவின் கம்பெனியில் வேலையை விட்டுட்டேன் என்று சொல்கிறான். மேலும் நீ எங்க போற என்று கேட்க கார்த்திக் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தையும் தீபா காணாமல் போன விஷயத்தையும் சொல்கிறான். 


மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?


மாணிக்கம் நானும் வேலையில்லாமல் சும்மா தான் இருக்கேன். உனக்கு உதவியா உன்கூட வரேன் என்று சொல்ல கார்த்திக் மாணிக்கத்துடன் மீனாட்சியை கடத்தி வைத்திருந்த ரவுடியை பார்க்க செல்கிறான். அந்த ரவுடியை பார்த்து மிரட்டி தீபா குறித்து விசாரிக்க நாங்க கடத்தல என்று உண்மையை சொல்கிறான். 


இதை தொடர்ந்து ஐஸ்வர்யா அருணாச்சலத்திற்காக விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்த அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கொத்து சாவியை கேட்க அருணாச்சலம் மீனாட்சியிடம் இருந்து சாவியை வாங்கி தர ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள். இறுதியாக இது கனவு என தெரிய வருகிறது. 


இதை அப்படியே உண்மையாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா அதே போல் விதவிதமாக சமைத்திருக்க இதை பார்த்த அருணாச்சலம் உனக்கு அறிவு இல்லையா.. அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, அதுவும் இல்லாமல் இன்னைக்கு அமாவாசை அப்படி இருக்கும் போது அசைவம் சமைத்து இருக்க என்று ஆவேசப்படுகிறார். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


காணத்தவறாதீர்கள் கார்த்திகை தீபம் சீரியல்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | பிரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் பிளாக்பஸ்டர் படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ