தென்னிந்திய நடிகர் சங்க அவசர பொதுக்குழு நேற்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். மேலும் செயலாளர் விஷால் முன்னிலை வகித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தக் கூட்டம் சினிமாக்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை ரத்து செய்வது பற்றி ஆலோசிப்பதற்காக நடைபெற்றது. 


தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பேசுயது:-


ஜி.எஸ்.டி, கேளிக்கைவரி உள்ளிட்ட சினிமாதுறை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக அரசிடம் பேச சங்க நிர்வாகிகள் செல்லும் போது என்னை அழைக்காதது ஏன் இனி வரும் காலங்களில் இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்து சினிமா துறை சார்ந்த பிரச்சனைகளில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். என அவர் கோரிக்கை விடுத்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால்:-


கேளிக்கை வரியை எங்களால் கட்ட முடியாது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டியதற்கு நன்றி. ஆனால் கேளிக்கை வரி மூலமாக சினிமாவுக்கு மணிமண்டபம் கட்டிவிட வேண்டாம். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடுத்த தேர்தல் 2018ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறும்.


சிவாஜி சிலை பீடத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதி பெயரை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கேளிக்கை வரி பற்றி பேசுவதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் அக்டோபர் 10ல் (செவ்வாய் கிழமை) முதல் அமைச்சரை சந்திக்க உள்ளனர். என்றார் நடிகர் விஷால்.


நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் காஞ்சனா, ஷீலாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆண்டு கணக்கு வெளியிடப்பட்டது. அதில் ரூ1.06 கோடி மூலதன கணக்கு,
ரொக்க கையிருப்பு ரூ.1.09 லட்சம், வங்கியிருப்பு ரூ.18.31 லட்சம், நிலையான சொத்துக்கள் ரூ.1.46 லட்சம், நடைமுறை சொத்துக்கள் ரூ.34.91 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த ரஜினி, கமலிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றும் அறக்காவல் குழு ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.